Monday, December 5, 2011

கண்ட நாள் முதல் ....

                   Daily நாம பாக்குற நம்ம வீட்டு ரோஜா செடி திடீர்னு ஒரு நாள்  ரொம்ப அழகா  கண்ணுக்கு தெரியும்....இத இன்னும் கிளு கிளுப்ப சொல்லனும்ன டெய்லி பாக்குற அதே புருஷனோட மூஞ்சி ஒரு நாள் செம smarta தெரியும்.    
             அதே மாதிரி தான் ஒரு 3..4.... படத்துல பார்த்திருந்தாலும் திடீர்னு நம்ம பிரசன்னா பச்சக் நு மனசுல ஒட்டிகிடது என்னமோ க.நா.மு la தான் .எனக்கு தெரிஞ்சி இந்த படமே சில பேருக்கு தெரியாது .ஆனா எனக்கு எவ்வளோ வாட்டி பாத்தாலும் அலுக்காத என்னோட movie listla க.நா.மு ஒண்ணு . இந்த படத்துல பெருசா கதைனு எல்லாம் ஒன்னும் இல்ல சின்ன வயசுல இருந்து சண்ட போடுற ரெண்டு பேர் விதி வசத்தால friends  ஆகி அப்புறம் மொள்ள மொள்ள அவங்களுக்கு குள்ள  காதல் எப்படி மலருது அது தான் outline.
              இந்த படம் என்னோட fav journo ROMCOM la   வர்ற படம் எந்த செண்டிமெண்ட் சிக்கலும் இல்லாம இது ஒருcandy floss movie. infact  இந்த படத்துல வர ஒரு ஒரு dialogue um  எனக்கு மனப்பாடம் .


            வெட்டி கத பேசாம விஷியத்துக்கு வருவோம் நம்ம பிரசன்னா இருக்கனே ...........இந்த படத்துல sooo sweet!!!!!!!!!!! நம்ம தெரு பையன் மாதிரியே இருப்பன். இந்த மாதிரி பசங்கலாம் சென்னைல எங்க பா இருக்கானுங்க எங்க தெருலயும் 4....5.....  இருக்கு ஆனா ஒண்ணும் சுமார் ராகம் கூட கெடையாது. கொஞ்சமா வளந்த  தடி, ஒரு semi formal look,எப்பவுமே கண்ணுல ஒரு குறும்பு தனம் ஆனாலும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு முகம் nu பாக்கவே பிரசன்னா நல்ல இருப்பான் இந்த படத்துல பிரசன்னா பண்ணது ஒண்ணும் மஹா பெரிய அவதார புருஷ வேஷம் எல்லாம் இல்ல,ஆனா தனக்கு என்ன role  குடுக்க பட்டதோ அத தன்னால நல்ல decent  பண்ண முடியும்னு he has proved.The way he emotes  in climax wow man இன்னொரு வாட்டி கேக்கவேக்கற scene.Actually எனக்கு ரொம்ப பெரிய கொழப்பம் என்னன்னா எனக்கு பிரசன்னா வ புடிக்குமா இல்ல  moviela வர கிருஷ்ணா வ புடிக்குமான்னு . ஈகோ,கோவம்,பொறாம,காதல், frienship,கெஞ்சல்,கொஞ்சல்,கேலி,கிண்டல்,அழுகனு கிருஷ்ணா கிட்ட இல்லாதது எது இது சினிமாகாக எழுதப்பட்ட ஒரு charactera  இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் காதலான அடைய ஆச படுற ஒருத்தன் தான் கிருஷ்ணா .எனக்கு கிருஷ்ணா வேற பிரசன்னா வேறையா  பாக்கவே முடியல.. கிருஷ்ண மாதிரி ஒரு lover atleast  ஒரு friendadhu வேணும்னு நான் ரொம்ப யோசிச்ச நாள் எல்லாம் கூட இருக்கு.அதுலயும் climaxla  பிரசன்னா  பேசுற dialogues  " உன்ன விட்டுட்டு போனும்ன நான் எப்பவோ போய் இருப்பேனே..... உன்  கூடவே இருக்கணும்னு தானே இருக்கேன் ,நீ இல்லாம வாழ முடியாதுனு தானே இருக்கேன் ".இந்த ஒரு படத்துக்காகவே பிரசன்னா என் மனச கவர்ந்த heros listla  வந்துட்டான்.இந்த படிக்கறவங்களுக்கு ரொம்ப கொழப்பம இருக்கும் இது என்ன படத்த பத்தின பதிவா, இல்ல பிரசன்னா பத்தின பதிவா, இல்ல அந்த படவா கிருஷ்ணாவ பத்தின பதிவான்னு எனக்கே புரியல.May be  எனக்கு புடிச்ச கிருஷ்ணாவா இருந்த பிரசன்னாவ பத்தின பதிவுனே  வெச்சிகோங்க...........

Wednesday, November 23, 2011

மோதல் காதல் .....

                        மோதல்ல ஆரம்பிக்கறது காதல்ல முடியுமா? முடியும்....... முடியும்.... சினிமால மட்டும் தான் முடியும் நிஜ வாழ்கைல அதுக்கான சாத்தியம் ரொம்ப ரொம்ப கம்மி.ஆனா சில நேரத்துல சினிமாவ மிஞ்சுரா மாதிரி நிஜ வாழ்கைல incidents நடக்கும்.நேத்து நானும் ரம்யாவும் பேசிட்டு இருக்கும் பொது இந்த topic  வந்துது " எனக்கு முதல்ல யாரயும் பாத்த ஒடனே புடிக்காது" நு ரம்யா சொன்னா... நான் சொனேன் எனக்கு அப்படிலாம் ஒண்ணும் இல்ல infact            சில பெற பாத்த ஒடனே எனக்கு ரொம்ப புடிச்சி போய்டும்..ஆனா கொஞ்ச பெற தான் எனக்கு புடிக்காம போய் இருக்கு அதுவும் நான் room  போட்டு எல்லாம் திட்டி இருக்கேன் கொலவெறியோட சுத்தி இருக்கேன் அவங்கள  சொன்னேன் அப்படி பேச்சு போய்டே இருக்கும் பொது தான் என்னோட சொந்த கத ஒண்ண சொன்னேன் ரம்யா கிட்ட... அவ அய்யோ! அப்படியா! சூப்பர்! நு செம த்ரில் ஆயிட்டா.

                 .நானும் சங்கீதாவும் நோய்டல இருந்து சென்னை வந்த புதுசு அப்போ இங்க PKTla ஆட்கள்  ரொம்ப கம்மி எங்கள mainframes platformla போட்டாங்க எங்களுக்கு mainframes na என்ன????  STD தானேனு கேக்குற லெவல் தான் so தினேஷ் கிட்ட எங்களுக்கு mainframes  கத்து குடுக்க சொன்னங்க. தினேஷோட  seat பக்கத்துல தான் சதிஷோட seat  .சதீஷ் அப்போ US போக ticketkaga  வெயிட் பண்ணிட்டு இருந்தாரு.சுருக்கமா சொல்லனும்ன project இல்லாம வெட்டியா இருந்தாரு. இந்த தினேஷ் இருக்காரே கலைளலாம் விட்டுடுவாரு  லஞ்ச் அப்புறம் தான் training  வர சொல்லுவாரு சும்மாவே நமக்கு ஒன்னும் புரியாது இதுல லஞ்ச் அப்புறம் வேற தூக்கம் சொக்கி இழுக்கும் இது இந்த கழுகுக்கு அதாங்க சதிஷ்க்கு எப்படி தான் தெரியுமோ கரெக்டா நடுல பாஞ்சி" dai தினேஷ் திருத்து டா இவன் என்ன சொன்னானோ அதா explain பண்ணுங்கனு ஒரு குண்ட தூக்கி போடுவாரு அப்போ தான் நான்லாம் தூக்கத்துல இருந்து எழுந்தரிப்பேன்....சங்கீதா ஏதோ தட்டு தடுமாறி சொல்லுவா ஒடனே நீ ஸ்டாப் பண்ணு நீ சொல்லுனு கரெக்டா நமக்கு ஆப்பு வேப்பரு நான் திரு திருன்னு முழிப்பேன் ஒடனே பாருடா " நீ உயிரை விட்டு சொல்லி குடுத்த இவங்க எப்படி கவனிக்கரங்க nu போட்டு வேற குடுப்பாரு".
                           எனக்கு செம அவமானமா போய்டும் அப்போ ஆரம்பிச்சேன் அவர திட்ட ஓடினேன் ஓட்டினேன் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினேன் மாதிரி திட்டினேன் திட்டினேன் செமைய திட்டினேன் . இது மட்டும் இல்லமா  எங்க பாத்தாலும் ஒரு கேள்விய கேப்பாரு "what is mainframes'? அதுக்கு கூகுள் la தேடி என்ன பதில் சொன்னாலும் அப்புறம் மேல சொல்லுனு சொல்லி எங்கள கொல்லுவாரு அதுலையும் என்ன பாத்தா எப்படி தெரியும்னு தெரியல அவருக்கு cafeteria la  பாத்தா கேப்பாரு, டீ குடிக்க போகும் பொது பாத்தா கேப்பாரு.....ஓபென சொல்லனும்ல wash room  போயிட்டு வந்துட்டு இருப்பேன் அப்போ கூட கேப்பாரு ...... இப்படி எங்க பாத்தாலும் ஒரே கேள்வி தான் என்ன வெறி ஆக்குன கேள்வி.
                        அந்த ஆல திட்டோ  திட்டுன்னு  தமிழ்ல இருக்கற அத்தன கேட்ட வரத்தையும்  use பண்ணி திட்டி இருக்கேன் இதுல சாபம் வேற unlimiteda  குடுத்து இருக்கேன்.சங்கீதா கெஞ்சுவா பாவம் d வேணாம் சாபம்லாம்  குடுக்காத  நு சொல்லுவா அவ கொஞ்சம் soft  ஆனா   எனக்குல தெரியும் எப்படி என்ன அந்த ஆளு torture & insult  பண்ணாருன்னு.இப்படி  போயிட்டு  இருக்கும் பொது நல்லவேள அவரு US போய்ட்டாரு இந்த கேட்ட எனக்கு செம ஜாலி ஒரு வாரம் நல்ல போச்சு.
                             ஒரு நாள் எனக்கு Same timela Ping  பண்ணாருஅய்யோ விட்ட சனி திரும்பவும் புடிக்கற மாதிரி இருந்துச்சு , சங்கீதா வ கூப்ட்டு  ஹே இந்த சூனியம் புடிச்சவன் எதுக்கு d எனக்கு  ping பண்றன்னு வேற சொன்னேன்....ஒடனே அவ என்னனு தெரியலையே  சும்மா பேசுன்னு என்ன இன்னும் திகில் ஆக்கிட்டா அப்புறமா தான் தெரிஞ்சிது சும்மா தான் பொழுது போகாம  ping பண்ணாருன்னு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அவர் மேல இருந்த பயம் போச்சு ஆனாலும் திரும்பவும் வந்து "what is mainframes nu"? கேட்டு  torture பண்ணா?....இதுக்கு  நடுல தான் aussie la settle  ஆகா போறதாவும் அதுக்கு என் கிட்ட idea  கேட்டாரு நானும் எங்க இவர் திரும்ப வந்து என்ன இம்ச பண்ணா போறாருன்னு சூப்பர் பிளான் சதீஷ் நல்லா  settle  ஆகுங்க nu  குள்ள நரி  idealam குடுத்தேன்.ஆனா அங்க போய் இங்க போய் கடசில என்கூடவே மொக்க போட்டு ,ஊர் சுத்தி, கல்யாணம் பண்ணி சபா நெனச்சாலே கண்ணா கட்டுது. இப்போ ஏன் சதீஷ் என்ன மட்டும் குறி வெச்சி அப்படி ஒரு கோல வெறியோட கேள்வி கேடீங்கனு கேட்ட ..".உன்ன பாத்தாலே எனக்கு உன் கால வரணும்னு  தோணும்  அதான் உன்ன மட்டும் கேள்வி கேட்டே கிண்டல் பண்ணேன்" சொல்லுவாரு. இப்படி  தான் மொதல்ல ஆரம்பிச்ச எங்களோட அது காதலா முடிஞ்சி இப்போ அப்போ அப்போ கொஞ்சம்  மோதலோட வண்டி ஓடிட்டு இருக்கு

Tuesday, November 15, 2011

நள்ளிரவில் .....

                   உங்களுக்கு நடுராத்திரில பசிச்சி இருக்கா ..... அப்படி பசிக்கும் பொது அந்த நேரத்துல சாப்ட hotel  தேடி அலைஞ்சி இருக்கீங்களா? நான் எப்பவுமே என்னோட லைப் கொஞ்சம் boring  தான்னு நெனைப்பேன். ஆனா இந்த போஸ்ட் எழுத start  பண்ண ஒடனே தான் யோசிக்கறேன் நானும்  lifea  கொஞ்சம் நல்லாவே enjoy  பண்ணி இருக்கேன்.

                    நான் முன்னாடி சொன்ன மாதிரி முன்னடிலம் நான் நைட் ஷிப்ட்ல தான் வருவேன் எவ்வளோ தான் 8 மணிக்கு சாப்ட்டாலும் மணி 12 அடிக்குதோ இல்லையோ எங்க வயத்துல மணி அடிச்சிடும் நேர மேல இருக்கற cafeteria போய் சிப்ஸ் ,கேக் அது இது கொட்டிகிட்டு வருவோம் weekday na பிரச்சன இல்ல இதுவே weekend na நாங்க செத்தோம்.சாப்ட ஒண்ணுமே இருக்காது பசங்களது பரவா இல்ல dum  அடிச்சி பசி ஆத்திப்பானுங்க ஆனா நாம என்ன பண்றது...  அப்படி ஒரு நாள் கொல பசி அன்னைக்கு ஷிப்ட்ல நானும் ராம் பிரகாஷும் இருந்தோம் நான் ஏற்கனவே http://sandhyaselvam.blogspot.com/2011/10/pkt.html ராம் பத்தி சொல்லி இருந்தேன்.ராம் ஜாலியா dum  அடிச்சிட்டு வந்துட்டாரு எனக்கு பசில எல்லாமே மங்கலா தெரிய ஆரம்பிச்சிடுச்சு அப்போ தான் ராம் அன்னைக்கு அவரோட கார்ல வந்தேன்னு சொன்னாரு ஒடனே எடுங்க கார நு நாங்க ரெண்டு பெரும் நைட் 1 மணிக்கு அண்ணா சாலைல ஆரம்ப்பிச்சு தி நகர் வரைக்கும்   போனோம் hotela தேடி.
                    எல்லாம் எங்க நேரம் ஒரு hotel  கூட தேரந்து இல்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லாம்  closed .கடசியா பண்டி பசார் கிட்ட ஒரு hotel  தேரந்து இருந்துச்சு சாமி புண்ணியவன்னு உள்ள போய் பிரியாணி சாப்ட்டு வந்தோம் .இப்படி வெறும் பசில சுத்தினது இல்லாம சும்மாவே ஸ்பென்சர்ஸ்  oppostiela இருக்கற டீ கடைக்கு ராம் கூட ஓட்டிகிட்டு நானும் பார்கவியும் போவோம் ஜனசந்தடி இல்லாம ரொம்ப அமைதியான அண்ணா சாலைய ஒரு சூடான டீ + பட்டர் பிஸ்கட் oda என்ன என்னமோ கத பேசிட்டு ரசிப்போம்.
               சில நேரத்துல எனக்கு  திடீர்னு  நைட் la கிரேப் ஜூஸ் குடிக்கணும் போல இருக்கும் நானும் சதீஷ் ஒன்ன ஷிப்ட்ல இருந்தோம்ன ஜாலியா கெளம்பிடுவோம் நேர சைதாபேட் முன்னாடி இருக்கற hyndai showroom  பக்கத்துல ஒரு ஜூஸ் கட நைட்   fulla தேரந்து இருக்கும் அங்க போய் ஒரு கிரேப் ஜூஸ் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மொக்க போட்டுட்டு வருவோம்  .
                 நான் நைட்  la வெளில போனதே இல்லப்பா nu பெருமையா சொல்றவங்கள பாத்தா சிரிப்பு தான் வருது நைட் லைப் எவ்வளோ peace & beautiful nu அவங்களுக்கு பாவம் தெரியவே இல்ல. அதா விட முக்கியம் அப்போ பண்ண சில்வண்டு தனம் எல்லாம் இப்போ நெனைக்கும் பொது ச நானும் வாழ்ந்து இருக்கேன்னு சொல்ல வெக்குது...

Monday, November 14, 2011

Jane do na....


போன வெள்ளிகேழமா வரைக்கும் எதுன்னு the best onscreen romantic jodi nu கேடீங்கன அது சூரியா - ஜோதிகா இல்ல கமல் - ரேவதி எதாச்சும் ஒரு ஜோடிய சொல்லி இருப்பேன் ஆனா இப்போ எந்த ஜோடி ரொம்ப ரொமாண்டிக் ஆனா ஜோடி நு கேட்ட என்ன பொறுத்த வரைக்கும் அது அமிதாப் - தபு தான்.
             ரொம்ப நாளா பாக்கணும்னு நெனச்சு  friday அன்னைக்கு ஆபீஸ்ல திருட்டு தனமா பாத்த படம் தான்  Cheeni Kum அமிதாப், தபு  நடிப்புல  2007வருஷம் ரிலீஸ் ஆனா படம் தான் இது. தன்னோட அப்பாவ விட வயசான ஒரு cook  மேல தபுக்கு காதல்.... எப்பவுமே வேல வேல நு சரியான சிடு மூஞ்சியா இருக்கற அம்பிதாப் காதல் வயப்பட்டு 64 வயசுல செய்யற குசும்பு ரொம்ப ரொம்ப சூப்பர்.இந்த படத்த விட என்ன ரொம்ப ஈர்த்தது இந்த படத்துல வர பாட்டு .நம்ம ஊர் இளையராஜா தான் மியூசிக் மொதல்ல இந்த படத்தோட பாட்ட கேக்குறவங்களுக்கு அட !அப்படின்னு தான் தோணும் என்ன எல்லா பட்டுமே தமிழ் ஹிட்டான 80's மெலடி பாடல்களோட  tune தான்.

            அப்படி இருந்தும் எது என்ன ஈர்த்தது இந்த படத்துல வர " jane do na " song   நம்ம நூறாவது நாள் படத்தோட "விழியிலே மணி விழியிலே" tune  தான்னு இருந்தாலும் அதோடpicturisation . இந்த பாட்ட ஸ்ரேயா கோஷல்  கோரல்லா கேக்கும் பொது ஒரு melting  மைசூர்பாக் சாப்டுற மாதிரி அவ்வளோ ஒரு சுகம் .காதல்வய படும் ஒருத்தன் தன்னோட காதலி கிட்ட என்ன குறும்பு சேட்டை செயவ்வனோ அதை எல்லாம் அமிதாப் இந்த வயசுல செஞ்சி பாக்குறது ஒரு வித சுவாரஸ்யம் தான் . ஒரு சீன்ல தபுவும் அமிதாபும் கண்ணாலையே காதலா அவ்வளோ ரொமாண்டிக்கா பகிர்ந்துப்பங்க.
       தபு கிட்ட "I wanna make love to you"அத எங்க பண்ணலாம் நு மண்ணடி போட்டு கேக்கும் எடத்துல amitabh is so much in luv....தூண்ல வெச்சி இருக்கற தபுவோட வெரல சீண்டும் போதும் ... தபுவையே ரசிச்சிட்டு இருக்கற சீன்....அப்படின்னு நெறைய சீன் சொல்லலாம் எல்லாமே அருமை இது  அமிதாபோட " One of the THE BEST PERFORMANCE". இது எல்லாமே என்னோட காதல் நாட்டகள எனக்கு நினைவு படுத்துச்சு..... கண்ணால பேசிக்கறது ......திருட்டுதனமா கைய புடிக்கறது ...... ஒரு ஓதட்டு சுழிப்பு cha i wanna fall in luv again....நேரம் கெடச்சா இந்த பாட்ட  youtubela கண்டிப்பா பாருங்க.

Friday, November 11, 2011

oouch sorry....

                நாம் எவ்வளோ தான் emglishla இல்ல தாய் மொழி இல்லாத வேற மொழிலையோ peter விட்டாலும் ஒரு ஆபத்து ,இல்ல பதட்டம் ,வலின்னு எதுவந்தாலும் நம்ம தாய் மொழில தான் கத்துவோம்.... கதறுவோம்.... கூப்பாடு போடுவோம்.... ஆனா இதுலயும் நான் கொஞ்சம் வித்தியாசம் எனக்கும் பதட்டமோ, இல்ல அவசரம்னு வந்த என் வைல தமிழே வரது என்னமோ மாயமோ என்ன கருமமொனு  தெரியல.. இது சில இல்ல பல சமயங்கள்ல நான் பாத்துட்டேன் அப்படி நான் அவசரத்துல, பதட்டத்துல.... ஒளர்ண ஒளறல் கொஞ்சமா சொல்லறேன் ...
                      முன்னாடி  சொன்ன மாதிரி என் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போக இந்திரா நகர் வழியா அடையாறு வரைக்கும் நடக்கணும் கிட்டத்தட்ட ஒரு 5 kms நடக்கனும்னு வெச்சிகோங்களேன் நானும் மஞ்சுவும் முன்னாடி நடந்து போய்டே இருந்தோம் பின்னாடி தன,சமு,சங்கீதா வந்துட்டு இருந்தாங்க சாமு முன்னாடி வேகமா வந்து "ஹே ஒரு பைத்தியம் கல்லால அடிக்கறான் நு சொன்ன பின்னாடி பாத்த அந்த பைத்தியம் அவளுங்க மேல கல்ல தூக்கி போட்டுட்டு இருந்துச்சு,நான் சுறு சுறுப்பா கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு இருந்த  traffic police கிட்ட  போய்" போலீஸ் unlce  போலீஸ் uncle  அந்த mad  எங்க மேல கல்லு போடுறானு".... ஏதோ LKG புள்ள rhymes  ஒப்பிக்கரா மாதிரி சொன்னேன் நான் சொன்ன விஷியத்த விட்டுட்டு நான் அத சொன்ன விதத்த கேட்டு என்னோட friend  மஞ்சுவும் அந்த போலிசும் செமையா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.அதுல இருந்து நான் யார கலாய்க்க  ஆரம்பிச்சாலும்  "போலீஸ் uncle  போலீஸ் uncle " நு என்ன ஓட்டி தள்ளிடுவாளுங்க.
                      Recenta இப்போ office ku  வந்துட்டு இருக்கும் பொது போரூர் சிக்னல்la இந்த பக்கம் ஒரு பெரிய கார் அந்த பக்கம் ஒரு lorry  நடுவுல நான் என்னோட வண்டில, வந்து நிக்கும் போதே lorry crossa   தான் வந்து ninuchu சிக்னல் விழுந்த ஒடனே lorry  மொதல்ல எடுத்தான் அவன் முன்னாடி போக போக என்னோட scootya  இடிச்சிகிட்டே போறான் கடைசி wheel  போகனும்ன என்னோட வண்டிய நசுக்கிட்டு தான் போகணும் அந்த உயிர்  போற நேரத்துல கூட " ஹே ஹே lorry stop stop nu " கத்துறேன் நல்லவேள அவன் நிறுத்தினான் இல்ல நான் scootyoda  நசுங்கி செத்து இருப்பேன் .இந்த  incidenta ஆபீஸ்ல சொல்லும் பொது கூட எல்லாரும் "எங்க அந்த நேரத்துல கூட நீங்க lorrykaran  கிட்ட இங்கிலிஷ்ல தான் பேசி இருக்கீங்க " கிண்டல் பண்ணாங்க .
                          இந்த மாதிரி ஒண்ணு இல்லங்க ரெண்டு இல்ல நெறைய comedy நடந்து நான் comedy peice ஆகி இருக்கேன். இன்னைக்கு காலைல கூட  gatela இருந்து பால் பக்கெட் எடுத்துட்டு திரும்பும் பொது ஒரு கால மிதிச்சிட்டேன் யார் கால்ட நு " oouch sorry" !!! nu சொல்லிகிட்டே திரும்புறேன் ஒரு தெரு நாய் ஓடுது எனக்கே ரொம்ப அவமானமா போச்சு..... இத சதீஷ் கிட்ட சொன்ன நாய்க்கெல்லாம் சாரி சொன்ன ஒரே ஆள் நீயா தான் d இருப்ப.... எப்போ தான் நீ இப்படி ஓட்ட இங்கிலிஷ்ல பேசுறத விட போரியோனு எப்பவும் போல என்ன அசிங்க படுத்தினாறு.

Thursday, November 10, 2011

SMS....

நாம எதேர்சையா டிவி ல பாக்குற பாட்ட  இருக்கட்டும் இல்ல ஏதோ ஒரு படமா இருக்கட்டும் மொதலா நமக்கு ஞாபக படுத்தறது அதோட நமக்கு ஓடிகிட்டு இருக்கற memories தான்.எப்பவுமே எனக்குள்ள ஒரு சேரன் alerta  இருக்கான்னு நெனைகதீங்க இது சோக கதலாம் இல்ல. Special occasionla + special person கூட பாத்த சூப்பர் படம்னா கண்டிப்பா நம்ம மனசுல நீங்க எடம் புடிச்சி தானே இருக்கும் .அப்படி எனக்கு ரொம்ப புடிச்ச படம் தான் SMS( சிவா மனசுல சக்தி).இந்த படம் ஒரு valentines day ku  தான் ரிலீஸ் ஆச்சு correcta  சொல்லனும்ன 2009 feb 14th .அந்த வருஷம் தான் நானும் சதீஷும் புருஷன் பொண்டாட்டி ஆகி வர மோதல் valentines day   எதாச்சும் speciala  செய்யணும் நெனச்சிட்டு இருந்தேன் . valentines day வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி எனக்கும் அவருக்கும் செம சண்ட வந்துடுச்சு (வழக்கம் போல).சண்டனா சாதாரன சண்ட இல்ல கொழ அடி சண்டைய விட மோசமான சண்ட, போச்சு valentines day வாது மண்ணாவது அவ்வளோ தான் சண்டையோட வீரியம் எப்படியோ 1 மாசத்துக்கு வரும் போல இருக்கே என்ன பண்ணலாம் நு யோசிச்சிட்டு இருந்தேன் வழக்கம் போல பொண்ண பொறந்த நாம தானே விட்டு குடுக்கணும் (rascals என்ன சிரிப்பு அங்க கத சொன்ன கதைய மட்டும் கேக்கணும் நமுட்டு சிரிபெல்லாம் சிரிக்க கூடாது )மனச தேத்திகிட்டு first compromise  படலத்துல எறங்கினேன்.மொதல்ல ஒரு ரோஸ் bouquet அனுப்பினேன் ரெண்டு பெரும் ஒரே ஆபீஸ்ல தான் வேல பாத்தோம் இருந்தாலும் suprisinga  இருக்கட்டுமேனு தான்.அதுலையே கொஞ்சம் மலை ஈரின சாமி இறங்கிடுச்சு. அப்புறம் feb 14th   அன்னைக்கு leave apply பண்ணேன், சரி அன்னைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்ச பொது தான் சரி அப்போ எதாச்சும் படம்  release  ஆகுதான்னு பாத்து SMS படத்துக்கு சத்யம் தியேட்டர்ல ticket  புக் பண்ணேன். படம் பாத்துட்டு வயத்துக்கு கொட்டிக போணுமே எப்பவும் போல கண்ட எடத்துக்கு போகாம எதாவது romantic resturant  போலாம்னு netla  தேடி தேடி city centrela இருக்கற roof top resturant LEVEL 4 2 table  புக் பண்ணேன்live music band வேற இருக்குனு சொன்னான்.

                என்னமோ எல்லாம் செட் ஆகி  வந்துச்சு எப்பவும் போல காலைல grocerry shopping முடிச்சிட்டு மதியானம் வீட்டுக்கு வந்து சமச்சி சாப்டுட்டு  மணி ஆகுது கேளம்புங்கனு சொன்னேன் எங்க கெளம்பனும் பீச் போலமனு கேட்டாரு இல்ல ஒரு எடத்துக்கு போறோம் கேளம்புங்கனு சொன்னேன் .ஏதோ கேளபுங்கனு சொல்றாளே கேளம்புவோம்னு இல்லாம எங்க போறோம் ?எங்க போறோம்? நு நாச மாதிரி கேள்வி மயிலாப்பூர் போங்க சொனேன் . ஒடனே நான் எங்க ஆமா வீட்டுக்கு தான் போக சொல்ல்றேனோ நு நெனசிகிட்டு எதுக்கு நாம அங்க போறோம் நு ஒரு cross question  வேற அய்யோ கேள்வி கேகம bikea ஓட்டுங்க நு சொல்லி ஒரு வழிய நுங்கம்பாக்கம் வரும் பொது wills lifestyle  போனும் சும்மா t-shirt  பாக்கனு சொன்னாரு சரி போவோம் போனோம் அப்பாவும் பேசாம டிரஸ் எடுக்காம எங்க போறோம் நாம சொல்லு ....சொல்லுனு....சப்பா சத்யம் தியேட்டர் போறோம் போதுமா சொன்ன ஒடனே..."ஹே ticket எல்லாம் கெடைக்காது   இப்போ nu ரொம்ப புத்திசாலி தனமா சொன்னாரு அப்போ தான் சொனேன் நான் ஏற்கனவே ticket  புக் பண்ணியச்சுனு". நான் ரெண்டு பேருமே movie buff so  அவர் செம thrill ஆயிட்டாரு.Moreover SMS மாதிரி ஒரு ஜாலியான படம் வேற செம குஷி ஆயாச்சு. Actually அது எந்த மாதிர்யான படம்னு தெரியாமையே நான் டிக்கெட் புக் பண்ணேன் நல்ல வேல படம் நல்ல இருந்துச்சு நன் தப்பிச்சேன்.
                   படம் பத்தாச்சு அப்புறம் வயத்த நேரப்ப போணுமே வாங்க போலாம்னு சொனேன் எங்க சரவ பவன் போலாமா இல்ல பொன்னுசாமிய வழக்கம் போல கேட்டாரு இல்ல அதுக்கும் ஒரு எடம் வெச்சி இருக்கேன் வாங்கனு சொனேன் எங்க d போனும்னு கேடறு நேர city centre  விடுங்க வண்டியன்னு சொனேன். சொன்னது தான் மாத்திரம் குயோ முய்யோ காத்த அரம்பிச்சிடாறு அங்க என்ன இருக்கு KFC & pizza corner  தான் இருக்கு எனக்கு செமைய பசிக்குது அங்கலம் நான் வர மாட்டேன்னு nu ... அவர ஒரு வழியா compromise பண்ணி கூட்டிட்டு போறதுக்குள்ள நான் பட்ட அவஸ்த்த இருக்கே அய்யோ அய்யோ ....actually அங்க level 4 nu resturant  இருக்கறது நெறைய பேருக்கு தெரியாது ...so it was a real suprise for him.Rooftop ,beach view ,candle lite dinner ...live musci band nu  வேறனு செம ambience.Buffet so அவர் பசிக்கும் சாப்பாடு பிரச்சன இல்ல .Washroom ku போறேன்னு சொல்லிட்டு அந்த band  கிட்ட போய் என்னோட  all time fav  brain adamsoda " everything I do " songa சதிஷ்காக  வாசிச்சு dedicate  பண்ண சொனேன்.They did the same ....Its was a one worthy moment to spend the bucks.

விடாது கருப்பு vs விட்டுவிடு கருப்பா

                        Generally ஒரு novela படமாவோ இல்ல சீரியல்lavo  திரை வடிவத்துல அதோட மெருகு குலையாம கொண்டு வரது ரொம்ப கஷ்டம்.Screenplay ku ஏத்தா மாதிரி சில மாற்றங்கள் செய்யறேன்னு கதையோட கருவையே கொன்னுடுவாங்க.கத புக்ல படிக்கும் பொது சில பத்திரங்கள நம்ம மனசுல ரொம்ப பெரிய தாக்கத்த  உண்டு பண்ணி இருக்கும். அவங்க மேல நமக்கு தனி அபிப்ப்ரயமே வந்துடும் கத அப்படின்ற விஷியத்த தாண்டி நம்ம மனசுக்குள்ள இந்த இந்த character  இப்படி இப்படி nu ஒரு உருவம் கற்பன பண்ணி வெச்சி இருப்போம் அதையெல்லாம் நேர்த்தியா கொண்டு வர சாமர்த்தியம் ஒரு சிலருக்கு தான் உண்டு.அப்படி மிகவும் வெற்றிகரமா original   novela விட அந்த சீரியல் தாங்கி வந்த விறுவிறுப்பு..... சுவாரஸ்யம்.....பாத்திர படைப்புன்னு நம்மள அசரடிச்சது விடாது கருப்பு .

                     விட்டுவிடு கருப்பாnu இந்திரா சௌந்தரராஜன் எழுதின  novel தான் விடாது கருப்புன்னு மர்மதேச seriesla  ரெண்டாவது   storya வந்துது.இங்க novel ஒசத்தியா இல்ல அந்த சீரியல் ஒசத்தியா nu arguement இல்ல ஒரு அருமையான மர்ம  கதைய ஒரு extraodinary thinker & director  கிட்ட ஒப்படச்சா அது திரைல எவ்வளவு  அழகா விறு விறுப்பா பண்ண முடியும்றதுக்கு பெரிய உதாரணம் இந்த சீரியல.விட்டுவிடு கருப்பா படிச்சவங்களுக்கு தெரியும் நான் என்ன சொல்லறேன். இந்த சீரியல் la பத்திரங்களோட basic characterisation ye   வித்தியாச படுத்தி இருப்பாரு  நாகா.மொதல்ல  கதையின் நாயகி ரீனால இருந்து வருவோம்
கதை படி ரீனா முற்போக்கு சிந்தனையோட இருந்தாலும் அவளோட dressing முறை எல்லாம் கொஞ்சம் tradintionala  இருக்கும் ஒரு இடத்துல  IS  "சேலைய இடுப்புல சொரிகிகிட்டு நடந்தா ரீனா நு சொல்லி இருப்பாரு " ஆனா சீரியல் படி ரீனாdressing லையும் ஒரு modern பெண் தான் அவ அணிஞ்சmaximum traditional dress na   அது சல்வார் கமிஸ் தான்.Novela ரீனாவுக்கும் ராஜேந்திரன் மேல காதல் பூக்குற மாதிரி   வரும் ஆனா seriala  எந்த ஒரு எடத்துலயும் ராஜேந்திரன ரீனா விரும்பவே இல்ல.சீரியல் la ரீனா ku ஒரு சோக பின்னணி இருக்கும் கதைய விட சீரியல் ரீனா பல மடங்கு powerful nu நான் நெனைக்கறேன்.
ராஜேந்திரன் - இந்த ஒரு பாத்திர படைப்பு தான் யாரோட மூளை நு தெரியல IS & நாகா சேந்து இந்த charactera  பண்ணி இருக்கலாம்.novela ராசு ரொம்ப தெரியசாலியா காமிச்சு இருப்பாங்க ஆத்திகமும் இல்லாம நாத்திகமும் இல்லாம நடுல இருப்பான் .ஆனா சீரியல் ராசு கடவுள் நம்பிக்கை உடையவன் .அதுலயும் கருப்பசாமி நிதி நிலைநாட்டுதுனு நம்பகூடியவன் . இந்த character  குள்ள split personalitya  ஒளிச்சு வெச்சி,அந்த correcta lose ends  இல்லாம flashbackoda connect பண்ணி ஒரு terrora create  பண்ணி இருப்பாங்க.
வாத்தியார் வரதராஜன் : கதைப்படி வாத்தியார் தான் கருப்பு ஆனா சீரியல் அப்படி இல்ல கதை முடிவுல வாத்தியார் தன்னையும் கொன்னுட்டு வேஷத்த கலச்சிடுவாறு ஆனா சீரியல் வந்ததோ வேற.
வெள்ளிநாச்சி சிவகாமி - novela இவங்க ரெண்டு பெரும் தான் பொன் பானை நகைங்கள மறச்சி அதா காப்பாத்திட்டு வருவாங்க ஆனா சீரியல் படி இவங்களோட characterization  ரொம்ப ரொம்ப விதியாசம இருக்கும்.Infact இப்படி எல்லா charactersum  ரீனாவோட professor  நந்தா , பிரம்மன் ,கட்டையன்,பூசாரி,சண்முகம் , ரத்னவோட காதலன்  அரவிந்த் நு கிட்ட தட்ட எல்லா பத்திரங்களும் நெறைய வித்யாசங்கள பத்து இருந்துது இன்னும் சொல்ல போன கதைய விட சீரியல் la இன்னும் ரொம்ப ஆழமா,அழுத்தமா இருந்துச்சு.வெறும் பாத்திர படைப்புல மட்டும் இல்லாம இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷங்களா கூட்டி இருப்பாரு டைரக்டர் உதரணத்துக்கு பொன் பானை நகைங்களுக்கான விடுகதை, Dr.நந்தாவோட கல்வெட்டு ஆராய்ச்சி , split personality concept nu எராளமான ஒரு மர்ம சீரியல்ku  தேவை படும் விஷயங்கள் . சீரியல் பாத்த அப்புறம் கதைய படிக்கறவங்களுக்கு சீரியல் ரொம்ப சூப்பர் நு சொல்லதோணும் கதைய படிச்சிட்டு சீரியல் பாக்குறவங்களுக்கு சீரியல்  excellent nu சொல்ல தோணும்.ஏனோ IS & நாகா இப்போலாம் கூட்டு சேந்து சீரியல் பண்றது  இல்ல.I am just expecting another spine chilling series from the duo IS & NAGA.

Thursday, November 3, 2011

correctana தப்பு

                       மனைவி  அமைவது மட்டும் இல்லங்க friends  அமையறதும் கடவுள் குடுத்த வரம் .நாம நல்ல friends select பண்ணனோம் நாம தப்பிச்சோம் இல்ல அவ்வளோ தான் நாம காலி அழிஞ்சோம் . Freinds  கூட சேந்து தான் இவன் குடிக்க கத்துகிட்டான் அவன் கூட சேந்து தான் இவன் ரொம்ப ஊர் சுத்துறான் நு சொல்லற அம்மா ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ யாரும் யாரையும் கெடுக்கறது இல்ல அவங்க அவங்கலவே தான் தன்னோட பாதைய select பண்றாங்க. அப்புறம் என்னப்பா நல்ல friends  கெட்ட friends  நு கேகுறீங்களா.
                          Luvers குள்ள சண்டன்ர பேர்ல நடக்குற comedya  விட  friends குள்ள நடக்குற கூத்துக்கள் ஜாஸ்தி.அதுல பாதி சரியான மொக்க விஷியங்கள்.எப்பவுமே நல்லா திண்டு மாதிரி இருக்கற என்னோட தங்கச்சி நல்லா ஒடம்பு இலச்சி போய் இருந்தா . என்ன நித்யா இப்படி  எலச்சிட எனக்கும் அந்த  diet plana சொல்லேன் நானும் கொஞ்சம் எலைக்குறேன் சொன்னதுக்கு," நான் சொல்லுவேன் ஆனா நீங்க யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா சரி சொல்லு  எதுக்கு இவ்வளோ  build up தரன்னு சொல்லி கேட்டா எனக்கும் என்னோட friendsukum  சண்ட அதுல சாப்டாம இருந்து தான் எலசிட்டேன் சொன்ன எனக்கு செம கடுப்பு ஆயிடுச்சு freinds கூட பேசாம இருந்தா சாப்ட கூடாத..... என்ன ஒரு லூசு தனம் இது.தன்ன தானே வருத்திக்க வெக்க கூடிய எந்த ஒரு relationshipum useless  தான் nu என்னோட அபிப்பராயம்.
                            வெறும் காதல்ல மட்டும் poseesiveness இல்ல infact friendshipla தான் ரொம்ப ஜாஸ்தி.... இவ எனக்கு Hi சொல்லல, என் பிறந்த நாளைக்கு first wish  பண்ணால, இன்னைக்கு என் கூட வராம அவ கூட போயிட்டா இந்த மாதிரி அல்ப விஷியங்கள் பல.இந்த கருமம் possessivenessa  பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்கு தனி poste  எழுதலாம் அதா விடுவோம்.எனக்கு எப்பவுமே friends ராசி கெடையவே கெடையாது.நான் நல்லா ஒருத்தர் கூட mingleஆயிட்டே வருவேன் திடீர்னு எதாவது பிரச்சன ஆயிடும் இல்ல அவங்க  வேற ஸ்கூல் போய்டுவாங்க, நம்ம கூடவே ஒட்டுன்னிங்க மாதிரி இருக்கறது எதுவும் நமக்கு ஒத்து வராது.இது ஒரு பக்கம் இருக்க என்னோட இன்னொரு ராசி என்னன்னா........ நான் எப்பவுமே  தப்பான friendsa  தான் தேடி போய் நட்ப்பு வேச்சிப்பேன் எல்லாம் என் கெரக நேரம்.தப்பான friends nu  சொன்ன ஒடனே நீங்க தண்ணி, தம் nu  நெனைக்காதீங்க.சில பேர் நம்ம கூடவே இருந்துட்டு நமக்கே குழி பறிப்பாங்க அனா நம்ம முன்னாடி இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருப்பாங்க.ஆனா இந்த மாதிரி ஆசாமிங்க எதுக்கு நமக்கு நல்லா  freinds மாதிரி நடிக்கணும் அது தான் நம்ம மனசுக்குள்ள ஓடுற கேள்வி பதில் இல்லாத கேள்வி.எனக்கு இந்த மாதிரி பல கசப்பான அனுபவங்கள் இந்த மாதிரியான freinds  மூலமா  sorry ஆசாமிங்க  மூலமா நடந்து இருக்கு. 
                             பேர் சொல்ல விரும்பாத என்னோட கூட படிச்ச friend  எனக்கு அடுத்த roll number அவ...... இதுனாலையே  நாங்க நல்லா freinds ஆனோம்னு தான் சொல்லணும் அடிப்படைல அந்த பொண்ணும் நானும் chalk & cheese characters  ஆனா ஏனோ எனக்கு அவல ரொம்ப புடிக்கும் may be  அவளோட அந்த அமைதியான குணமா கூட இருக்கலாம்.இப்படி  அடுத்தடுத்த இருக்கற roll numberla ஒரு 7  பேர் நல்லா friends  ஆனோம் .நாங்க 7 பெற இருந்தாலும் எனக்கு என்னமோ அவல மட்டும் தான் ரொம்ப புடிக்கும் எப்பவும் போல அவளுக்கும் என்ன மட்டும் தான் புடிக்கணும் லூசு மாதிரி நானும் அப்போ அப்போ நெனைப்பேன் ஆனா என்ன பெத்தத தவிர என்னோட அம்மா.... அப்பா.... வேற எந்த பாவமும் செய்யாததுனால அந்த புண்ணியத்துல நான் என்னையே  அப்போ அப்போ self analyise பண்ணிப்பேன்.அதுனால ரொம்ப லூசு தனமாthink பண்ணாம கொஞ்சம் தப்பிச்சேன்.ஆனா எனக்கு வந்த பிரச்சன possessiveness  இல்ல, நான் யார ரொம்ப விரும்பி நேனோ அந்த பொண்ணு என்ன பத்தி எங்க gang friends கிட்டயே தப்பு தப்பா சொல்லி இருக்கறது பின்னாடி தான் எனக்கு தெரிய வந்துது.அவ நல்லா நேரம் இது எல்லாம் எனக்கு தெரிய வந்த பொது நாங்க காலேஜ் முடிச்சி இருந்தோம்.இல்லனா மட்டும் நான் என்ன கிழிச்சி இருப்பேன்னு கேக்குறீங்களா, ஒன்னும் கிழிக்க முடியாது தான்.ஆனா  அவ ஏன் என்ன பத்தி தப்பு தப்பா எல்லார் கிட்டையும் சொன்னானது தெரிஞ்சிக்கலாம்ல.இது மட்டும் இல்லாம என்ன பத்தி எப்படி மத்தவங்க கிட்ட சொன்னாலோ அதே மாதிரி அவங்கள பத்தியும் என் கிட்ட தப்பு தப்பா சொல்லி இருந்தா.அவ ஏன் அப்படி செஞ்சான்னு எங்களுக்கு இது நாள் வரைக்கும் தெரியல நாங்களும் அவ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க விரும்பல எனக்கு என்னமோ அவ என்னோட முதுகுல குத்தினா மாதிரி இன்னும் சின்ன வலி இருக்கு.இது ஒரு பெரிய பண ஏமாத்தோ, இல்ல பித்தல மாத்தி வேலையோ இல்ல ,ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு நம்பிக்கை  துரோகம் தான்.
                       இப்படி  இவ ஒருத்தி மட்டும் இல்ல இன்னும் பல பேர் கிட்ட இப்படி  தான் நான் செம அடி வாங்கி இருக்கேன் ஒரு வேல அவங்களோட இயல்பே அது தானோ, நான் தான் தப்பானவங்க கூட சகவாசம் வேச்சிகிட்டேனோ அப்படியே இருந்தாலும் என்ன புடிக்கலன புடிக்கலன்னு சொல்லிடு போய் இருக்கலாம் அதா விட்டு எதுக்கு என் கூட  இருந்துகிட்டே எதுக்கு எனக்கு குழிப்பரிக்கணும். நாம எப்பவுமே கைல இருக்கற வைரத்த விட்டு கூழன்கல்ல பொருக்கரதுல தான் ஆர்வம் காட்டுவோம் அதே மாதிரி சில நண்பர்கள் நம்ம கூடவே இருப்பாங்க கூடவே பயணிப்பங்க ஆனா நம்ம மனசு  அவங்கள ஒருபோதும் கண்டுக்கவே கண்டுக்காது.இன்னைக்கு அந்த மாதிரி என்கூடவே இருந்து நான் கண்டுக்காம இருந்தா அந்த சில நண்பர்கள் தான் இப்பவும் என்கூட இருக்காங்க.எனக்கு எந்த பிரச்சனையும் குடுக்காம .
                         என்ன பொறுத்த மட்டில் நானா தேடிபோற எந்த ஒரு  relationshipum எனக்கு workout ஆனது இல்ல அதுனாலயே யாரையாச்சும் புடிச்சே இருந்தாலும் ஒரு Hi யோட முடிச்சிக்கறேன். நம்மளோட சாப்பாடு மட்டும் இல்ல நமளோட  friendsum நம்ம கூட இருக்கணும்னு விதிக்கப்பட்டவங்க தான் நம்ம பயணத்துல கொஞ்ச தூரம்னாலும்  வராங்க மத்தவங்க எல்லாம் தடம் தெரியாம காணாம போய்டுறாங்க.

Wednesday, November 2, 2011

சின்ன பூ .....

ரொம்ப நாலா எனக்கு புடிச்ச நடிகைய பத்தி எழுதணும் யோசிச்சிட்டே இருந்தேன் எப்படி எழுதினாலும் அது மகேஷோட "ஆஷா கேளுன்னியோட " inspiration ஜாஸ்தி இருந்துச்சு. Cha இது நமக்கு சரி பட்டே வராதுன்னு விட்டுட்டேன் . சரி கொஞ்சம் try  பண்ணி தான் பாப்போமே யோசிச்சேன் இதோ உங்களுக்கு இதுல எங்கியாச்சும் ஆஷா கேளுன்னி post  ஞாபகம் வந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லப்பா.....



                                எல்லா perioldlaiyum ஏதோ ஒரு நடிகையோட ஆதிக்கம் தல தூக்கி இருக்கும் அப்போ மினால் மாதிரி ஒரு புது முகம் அறிமுகம் ஆவாங்க. அந்த புதுமுகத்துக்கு நேரம் நல்லா இருந்தா பெரிய நட்சத்திரமா ஜோளிப்பங்க .இப்படி அம்பிகா, ராதா, நு தமிழ் சினிமா குட்டை பாவாடைல மூழ்கி இருக்கும் பொது தான் அந்த மின்னல்  நதியான்ர பெர்ல வந்துச்சு.
                            எனக்கு நதியா விருப்பம் ஆனது பூவே பூச்சுடவா படத்துல தான் . யாருக்கு தான் அந்த படம் புடிக்காது . அந்த படத்த நான் பாத்தது  என்னவோ ஸ்கூல் படிக்கும் பொது தான். அத பாக்கும்  பொது ஒரு படம் differenta  எடுத்து இருக்காங்கனு மட்டும் புரிஞ்சிது .அந்த படம் எடுத்த location  ஆகட்டும், இல்ல ஹீரோ வே இல்லாம ஒரு படம், அதுவும் துரு துரு நு ஒரு பொண்ணு 4 பசங்களோட சைக்கிள் ஓடிட்டு jollya  பாக்கவே ரொம்ப refreshinga  இருந்துச்சு .மாநிறமா  இருந்தாலும் அழகான முகம் அளவான உடல் வாகுனு 80's la  பசங்க  மனசுல நீங்கத எடம் புடிச்சவங்க நதியா .
                         ராதாவோட அதீத glamourla  சொக்கி இருந்த மக்களுக்கு நதியா ஒரு பெரிய refreshing breeze  தான் .பாக்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நதியா ஒரு துரு துரு சுட்டி பெண்ணா ரேவதிக்கு அப்புறம் மக்கள் மனசுல எடம் புடிச்சாங்க.இவங்களோட plus pionte   அவங்களோட dressing sense ..... Modern dress na அதுல கண்டிப்பா கவர்ச்சி இருக்கனும்ற எண்ணத துள் துள் ஆக்கினவங்க.  80's சோடா fashion iconu  தான் இவங்கள சொல்லணும்.
                    அந்த timela எங்க அம்மா வேல பாத்துட்டு இருக்கும் பொது நதியா வே ஒரு பெரிய brandam .நதியா பொட்டு, நதியா கம்மல், நதியா வளையல் நு அவங்களால பல plastic companies  வழ்துச்சு  nu  தான் சொல்லணும்.நதியா - சுரேஷ் ஒரு ஹிட் pairne  சொல்லலாம் they complimented each other well.ஹீரோஸ் ஜாஸ்தி dominate பண்ணிட்டு இருந்த timela கூட தனக்கு weight age  இருக்கற  rolesa பாத்து செலக்ட் பண்ணி நடிச்சாங்கலாம்.ஏதோ ஒரு பேட்டில படிச்சேன் மௌன ராகம் இவங்க நடிக்க வேண்டிய படமாம் dates  இல்லாததுனால ரேவதிக்கு போயிடுச்சாம்.
                நம்ம த்ரிஷா மாதிரி தொடர்ந்து கலை சேவை புரிஞ்சி ரசிகர்களே அம்மா பொது உன் மூஞ்சிய எவ்வளோ நாள் தான் பாக்குறதுன்னு சொல்ல வெக்காம தன்னோட peakla she retired .கொஞ்ச படமே நடிச்சாலும் கச கச நு இல்லாம neata  நடிச்சிட்டு போய்ட்டாங்க .நதியா தனக்கு எப்படி ஒரு sytle  வெச்சி இருந்தாங்களோ அதே மாதிரி தான் நடிக்க வரும் போதே தன்னுக்கு  ஒரு காதலன் இருக்காறுனும் அவர தான் கல்யாணம் பண்ண போறேன்னும் publica starting of the careeryare சொன்ன ஒரே நடிகை எனக்கு தெரிஞ்சி இவங்க தான் நு நெனைக்கறேன். திகட்ட திகட்ட glamour  இருந்த காலத்துல நல்லா கண்ணியமா நடிச்சிட்டு தென்றல் மாதிரி போனாங்க.யாருப்பா அந்த நடிகை நு கேக்குற அளவுக்கு 80's நடிகைகள் எல்லாம் ஊதி போய் இருக்கும் பொது நதியா இன்னும் காலேஜ் பொண்ணு மாதிரி சிக்குன்னு இளமையோட இருக்காங்க .
             எனக்கு personala நதியாவ புடிக்க காரணம் அவங்க கிட்ட இருந்த sytle quotient.She lights up the screen .அவங்க கிட்ட naturalave ஒரு youthfulness இருக்கு.she changed the perception of being modern without being vulgar .I hope & pray that  she gets more powerful roles & have beautiful life .

மின்பிம்பங்கள் .....

இந்த வார்த்தைய கேட்ட ஒடனே எனக்கு ஞாபகம் வரது எல்லாமே கே.பலச்சந்தேரோட சீரியல் தான். இந்த சீரியல் culturea முதல் முதல்la start  பண்ணது எனக்கு தெரிஞ்சி கே.பி தான் . எனக்கு DDla  வந்த எந்த ஒரு சீரியல் lum பெருசா ஞாபகம் இல்ல உடல் பொருள் ஆனந்தி ,மேல் மாடி கலி தவிர அத கூட  நான் பத்தது எல்லாம் இல்ல என்னோட class mates  சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் . அப்புறம் கே.பி மெதுவா கேபிள் டிவி அதாவது அப்போ வந்த சன் டிவி கு தாவின பொது அவர் எடுத்த மோதல் சீரியல் "கையளவு மனசு " .
                           இந்த சீரியல் startingla  இருந்து முடியற வரைக்கும் ஒரு  episode குட தவற விடாம எங்க அம்மா பத்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு .இந்த சீரியல்  la புடிச்ச விஷியமே அதோட  title song தான்,அந்த பாட்டு ரொம்ப  catchya நல்லா இருக்கும் .அந்த drama la குடும்ப கஷ்டம் தாங்காம பசங்கல கீதா தத்து குடுக்கும் பொது எங்க அம்மா நீயும் சேட்டை பண்ண உன்னையும் இப்படி தான் தத்து குடுத்துடுவேன் நு சொல்லி என்ன பயமுறுத்தி இருகாங்க.... அதுல வர அந்த கடைசி குட்டி தீபிகா வ பாத்து நான் ஏன் இவ்வளோ அழகா இல்லன்னு ஏங்கி  வேற இருக்கேன்.அப்புறம் காதல் பகடை,ப்ரேமி nu நெறைய சீரியல் கே.பி productionsla இருந்து  வந்தாலும் என்ன மட்டும் இல்லாம தமிழ் நாட்டையே கட்டி போட்ட ஒரு சீரியல் சீரீஸ் na அது "மர்மதேசம்" தான்.


                           ஆரம்பத்துல ரகசியம் nu தொடங்கி நெறைய பேரால பாக்கபடாத ஒரு ரொம்பவும் நல்ல சீரியல். நாங்க என்னமோ அது முடியற நேரத்துல இருந்து தான் பக்க ஆரம்பிச்சோம் ரொம்ப interestinga இருந்துச்சு .நம்ம ஊருக்கு சீரீஸ் மாதிரி type ரொம்ப ரொம்ப புதுசு அதுவும் ஒரு வித புது அனுபவம் தான் . இந்த சீரீஸ்  எல்லாமே மர்ம கதைகள் அதுனாலயே வியாழ கெழமை ஆனாலே கரெக்டா பாத்துடுவோம் .இந்த மர்மதேசம் சீரீஸ் la ரொம்ப ஹிட் நாடகம் na அது விடாது கருப்பு தான் . குதுரை ,கருப்பு,அரிவாள் வெட்டு, இதுக்கு நடுல துப்பறியும் பெண் ரொம்ப வித்தியாசமா எலாரையும் கட்டி போட்ட சீரியல் அது .விடாது கருப்பு வந்த பொது நான் ஒரு 4th std படிச்சிட்டு இருந்தேன் அதோட  விறு விறுப்பு புடிச்ச புரிஞ்ச எனக்கு அந்த split personality concept  கொஞ்சம் புரியல அப்புறம் அத rajshri.com la தேடி பத்த பொது I could understand it.
                        இதுக்கு நடுல teleflims nu  மினி சினிமா எடுத்தாங்க சன் டிவி, அப்போ அதுக்காக கே.பி எழுதி இயக்கினது தான் காதல் ஒன்று வாங்கி வந்தேன்.Ooty backdropla set ஆனா இது ஒரு romcom variety இதுல நடிச்ச அந்த அக்கா ,ஜெய் கணேஷ் கேரக்டர் அப்புறம் குட்டி தீபிகா இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு..... எவ்வளோ தேடியும் கெடைக்காத அந்த title song உள்ளபட எல்லாமே அருமை .                கே.பி சன் டிவ்க்கும் சண்ட வந்து அவர் ராஜ் டிவி  ku தாவி ஜன்னல் series, காசளவு நேசம்,ரமணி vs ரமணி - 2 nu  மாதிரி சீரியல் la நெறைய புது முயற்ச்சிகள் பண்ணிட்டு இருந்தாரு.ஜவ்வு மாதிரி  seriala இழுக்காம இரத்தின சுருக்கமா வாரம் ஒரு சீரியல் nu ராஜ் டிவி la  வந்துட்டு  இருந்துச்சு.இந்த, வாரம் ஒரு சீரியல் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு மோகன் ராம்  & இதயம் நல்லெண்ணெய் சித்ரா நடிச்ச சீரியல் out and out comedy serial with good twist & turns .இவ்வளோ நல்ல சீரியல் குடுத்த கே.பி ye பின் நாள்ள அண்ணி ,சாந்திநிலையம் மாதிரி தலைவலி தர கூடிய மெகா சீரியல் பக்கம் போனது தான் வருத்தம்.ஒரு வேல கே.பி இந்த சீரியல் culturea start பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு தமிழ் நாட்டுல பல அம்பிளங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கெடச்சி இருக்குமோ,நம்ம வீடு எழவு வீட  மாறாம இருந்திருக்குமோ என்ன பண்ண விதி வலியது.....இது கே.பி எனென்ன சீரியல் எடுத்து இருக்காருன்னு கணக்கெடுக்க இல்ல கழுத தேஞ்சி கட்டெறும்பான கத மாதிரி தான் இந்த சீரியல் கதையும். கே.பி ஒன்னும் revolutionary  சீரியல் எடுக்கல ஆனா அதே நேரம் வீடே சேந்து ஒப்பாரி வெக்கற மாதிரி இப்போ வர மகா மட்டமான சீரியல் lum  நிச்சயமா எடுக்கல.இப்போ சீரியல் ra பேர்ல கண்ட கருமத்த எடுத்துகிட்டு இருக்கற ஒவ்வொரு  directorum தயவு செஞ்சி நான் மேல சொன்ன எதாச்சும் ஒரு  dramava  பாருங்க அப்புறம் நீங்க எல்லாம் குற்ற உணர்ச்சில direction பக்கமே வரமாடீங்க .

Tuesday, November 1, 2011

மழையே மழையே ......

 சென்னைல இருகறவங்களுக்கு smilea கொண்டுவர நெறைய விஷியங்கல்ல மழையும் ஒன்னு . ஏன்ற கரணம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல காஞ்சி போய் கெடக்கற எடத்துல நல்ல மழை பெஞ்சா சந்தோஷம் தானே.மழைனலே பல விதமான mixed reactionsa பாக்கலாம்  ஸ்கூல் காலேஜ் போறவங்களுக்கு leave nu ஜாலி ,அம்மா கு துணி காயாதுனு கவலை,வேலைக்கு போறவங்களுக்கு அய்யோ இந்த office ku இந்த climatela ya கேளம்பனுமேனு எரிச்சல் ,.இப்படி  பல emotions   மழையோட connect  ஆகி இருக்கும். எனக்கு மழைன ரொம்ப....... ரொம்ப......... ரொம்ப...... புடிக்கும் அதுவும் மழைல நெனையறதுன cha chance இல்ல.... மழைல நெனயறது யாருக்கு தான் புடிக்காது .மழைன்னு சொன்னாலே அதா ஒட்டி வர நியபகங்களுக்கு பஞ்சமே இருக்காது அதுல mostly  இனிமையான,happy memories  தான் இருக்கும் .
                      சின்ன வயசுல எல்லாரும் போல மழை வந்தா ஸ்கூல் லீவ் ஒரு பெரிய bedsheeta  பொத்திட்டு TV முன்னாடி ஒக்கந்துக வேண்டியது அப்போ அப்போ யாராச்சும் மழைல ஆட்டம் போடுறங்கலானு நோட்டம் விட்டுட்டு செஞ்சி வெச்சி இருக்கற பேப்பர் கப்பல தண்ணில மேதக்க விட்டுட்டு ஓட்டிடுவேன் .என்னோட சின்ன வயசுல மழை நாள்ல பஜ்ஜி எல்லாம் சாப்ட ஞாபகம் இல்ல சாயங்காலம் நல்ல சூடான டீ குடிச்ச ஞாபகம் தான் இருக்கு.
                            வளந்த அப்புறம் பெரிய மழை ஞாபகம் சொன்ன அது 2005 la வந்த பெரிய புயல் மழை தான். சென்னையே 3 நாள் அல்லோல பட்ட மழை அது....current cut  ஆகி இருட்டுலையே மூழ்கி இருந்துது சென்னை .அப்போ பாத்து தான் எங்க காலேஜ் ல  semester practicals  நடந்துட்டு இருந்துச்சு ,அன்னைக்கு Microprocessor practicals  எங்களுக்கா மழை வேற....practicals...  வேற exam இருக்குமா இருக்கதானே தெரியல நான் படிச்சு காலேஜ் வேற Govt college so போன் பண்ணலாம் எடுக்க மடங்க என்ன பண்றது தெரியாம எங்க  gang...  discuss பண்ணி ஒரு வழிய நாங்க காலேஜ் போறதுன்னு முடிவு பண்ணோம்.ரோடு எல்லாம் செம வெள்ளம் ஒரு பஸ் கூட இல்ல ஏதோ கெடச்ச பஸ்ல தாவி ஏறினா நம்ம ஊர் பஸ் நல்ல நாள்லயே நாயகம் இதுல மழைல கேக்கவா வேணும் .....ஒரு பக்கம் அப்படியே பேப்பர் கப்பல் மாதிரி சாஞ்ச வண்ணம்...... பஸ்ல ஆள் என்னமோ இல்ல இருந்தாலும் பஸ் லட்சணம் அப்படி கண்டக்டர் வேற இந்த மழைல எங்க போற பாப்பா காலேஜ் நு சொல்லிடு ஊர் சுத்த போரியனு கடுப்ப கெளப்பிட்டு இருந்தான் .
                   அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு  20 பேர் ஒகந்து இருக்காளுங்க ஒருவேள nighte  வந்து படுத்து இருபளுங்கலோ ஆனாலும் அவங்கலாம் ரொம்ப தான் sincere சிகாமணிங்க. ஒரு வழிய practicalsa முடிச்சிட்டு வீட்டுக்கு கேளம்பலம் நு கேளம்பின இந்த  பாழா போன மழை விட்ட பாடு இல்ல நாங்க தரமணி la இருந்து இந்திரா நகர் வழிய அடையாறு டேபோ வரணும் நடராஜா service  தான் .செம வெள்ளம் தெர்மாகோல் மாதிரி மேடந்துடே வந்தோம்.

                       எனக்கு பாட்டு இல்லாம மழை கெடையாது மழைல நெனஞ்சலோ ,இல்ல மழையே பாத்தாலோ நான் ஒடனே பாட்டு பட ஆரம்பிச்சிடுவேன் public placela இருந்தா  முணுமுணுக்கவாது செய்வேன்.அப்படி மழை பாட்டுனே நான் ஒரு  4-5  பாட வெச்சி இருக்கேன்.ex "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" , "மழையே மழையே இளமை  முழுதும் ","ஓஹோ ஓஹோ மேகம் வந்தது", "மழை மழை என் உலகத்தில வருகின்ற முதல் மழை" .....இப்படி கொஞ்சம் பெருசு.எனக்கு மழைல செய்ய புடிக்கும் விஷயங்கள் சிலது இருக்கு அதுல ஒன்னு ரெண்டு நான் செஞ்சும் இருக்கேன் .....உதரணத்துக்கு மழை பெய்யும் பொது பைக் ஓட்டவோ இல்ல பைக்ல பின்னாடி ஒக்காந்து போறதுன ரொம்ப பிடிக்கும்,அப்புறம் மிதமான சாரல் மழைல la train ஜன்னல்  seatla ஒக்காந்து  கிட்டு விகடன் படிக்க புடிக்கும் .முழுசா நெனஞ்சி ஈரம் கஞ்சும் காயமலும் இருக்கும் பொது டீ கடைல நின்னு டீ குடிக்க புடிக்கும்(bajji is default).அப்புறம் மொட்டை மாடில நின்னு மழைய ரசிக்கறது புடிக்கும்.மழை நாள்ல எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும் மழை nu சொன்ன ஒடனே நமக்குள்ள பொதஞ்சி போய் இருக்கற நம்ம குழந்தை தனம் கண்டிப்பா ஒருதடவையேனும் வெளிய வரும் நான் இப்போ மழைல நெனைய போறேன் :))

Thursday, October 27, 2011

அவ்விட தேசம் ...

நீங்க பாத்த அழகான இடம் எது  nu கேடீங்கன்ன எல்லாரும் சொல்லற listla கண்டிப்பா கேரளா  இருக்கும் .அமாம் நிச்சயமாக கேரளம் "Gods own country "  தான் . இந்தியாவோட சின்ன statea இருந்தாலும் அதோட இயற்கை எழில் கொஞ்சும் அழகு ku ஈடு இணையே இல்ல nu தான் சொல்லணும்.மலையாள பொண்ணுங்க எவ்வளோ அழகோ அதா விட பல மடங்கு  அந்த மண் அந்த ஊர் அவ்வளோ அருமை....
        நான் naturea  ரொம்ப ரசிக்க கூடிய ஆள் எல்லாம் இல்ல..... எல்லாரும் கேரளா அவ்வளோ அழகு ஆஹா ஓஓஹோ நு புகழ் பாட்டு பாடும் பொது அப்புடி என்ன தான்  pa இருக்கு அங்க ... அது என்ன himachal pradhesh மாதிரி பனி தேசமா என்ன? வெறும் புல்லு ....மரம் அதுக்கு இந்த  indha buildupa  nu தான் நானும் நெனச்சேன்...... ஆனா இப்போ அப்படியே  என்ன upside downa மாத்தினது ....மயக்கினது அவ தான். என்ன அவனு சொல்லறேன்னு பாக்குறீங்களா? எதாச்சு ஒன்னு அழகா இருந்த அது கண்டிப்பா பெண்ணா தானே இருக்கா முடியும்(i am not getting into mars vs venus conversation ) .
                காதல்,புகழ், மது, மாது, மாட்டும் போத இல்ல இயற்கை அதா விட பெரிய போத .இது போதும்னு சொல்லவே தோணாது இன்னும் இருக்கா nu தான் கேக்க தோணும்

          எனக்கு இயற்கைய ரசிக்க சொல்லி குடுத்தது என்னமோ நம்ம மலைகளின் இளவரசி ஆனா மாசு இல்லாத, மாற்றம் இல்லாத கடவுள கிட்ட பாத்த மாதிரி இயற்கைய கிட்ட பாத்தது  கேரளத்துல தான்.என்னோட முதல் கேரளா visit  நான் college படிக்கும் பொது மூணார் போனோம் familyoda மதுரைla இருந்து ஒரு tempo travellerla தான் போனோம். பயணம், அதுவும் மலை பயணம் ,,அதுவும் குடும்பத்தோட இத விட வேற என்ன பெரிய  enjoyment இருக்க பொது அதுவும் vacation timela.நாங்க மூணார் போய் சேரும் பொது கூம் இருட்டு பக்கத்துல இருக்கற ஆள் குட தெரியாத இருட்டு எங்க போறோம் எந்த எடத்துல தங்கி இருக்கோம்னு கூட தெரியல காலைல நாங்க தங்கி இருந்த room ku வெளில போய் பாத்தா..... பச்சை கம்பளம் விரிச்சா மாதிரி எங்க resorta சுத்தி T estate. மிதமான வெயில் ,மொகத்த தொட்டு போற குளிர் காத்து, எங்க பாத்தாலும் பச்சை போர்வை nu மூணார் ஒரு சொர்க்கம் .ஆனா என்னவோ எனக்கு மூணார் ஒரு kerala effecta தரவே இல்ல may be அது தேனி border  நாளாவோ என்னவோ.ஏதோ ஒரு மலைப்ரதேசத்துக்கு போன feel  தான் இருந்துச்சு .        
           அதுக்கு அப்புறம் கேரளா போறத பத்தி அதிகம் நான் யோசிக்கல.. 2010  aug la ஒரு சின்ன vacation போறதா  plan பண்ணோம் எங்க போறது nu  வரும் பொது நான் netla browse பண்ணி வயநாடு nu  கேரளா ல ஒரு எடம் இருக்கு அங்க போலாம் சொன்னேன், வயநாடு அதிகம் explore  பண்ணாத எடம் கேரளாla So எல்லாரும் அங்கேயே போகலாம்nu decide   பண்ணோம் . Geographically கேரளாவோட northla  இருக்கற ஒரு சின்ன district.வயநாடு.சென்னைல இருந்து கோழிகோடு வரைக்கும் trainla போய் அங்க இருந்து  tempo travellerla வயநாடு மலை ஏறினோம் .மலை nu சொன்ன ஒடனே நம்ம ஊட்டி இல்ல கோடை மாதிரி கற்பன பண்ணாதீங்க அந்த அளவுக்கு hairpin bends இல்ல  இங்க . மூணார் மாதிரி இல்லாம இந்த வாட்டி பகல்la மலை ஏறினோம். இளம் பச்சை செடிங்க , நல்லா ஓங்கு தாங்க வளந்து இருக்கற மரங்கள்.... பாதி எடத்த மூடி இருந்த mist மறக்கவே முடியாத பயணம் அது " i smelled the real flavour of kerala" இல்ல இல்ல  to be precise the real smell of nature.வாயனாடுல homestays  தான் ஜாஸ்தி நாங்க ஒரு 9 பேர் போனதுனால homestayla  தான் தங்கினோம் .அந்த property  இருந்த எடமே ஒரு சொர்க்கம் .சிராபூஞ்சி ku  அப்புறம் அதிக மழை பெய்யறது அந்த எடத்துல தான் .ஒரு மலை பிரதேசத்துல..... சுத்தி பச்சை பசேல்னு செடிக்கு....  நடுல இருக்கற  அழகான வீடு திண்ணைல ஒக்காந்து மழைய ரசிக்கறது எப்படி பட்ட கொடுப்பினை நான் தெரிஞ்சிக்கிட்டது அப்போ தான் .வாயனாடோட specialitye அதோட rawness  தான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதிகமா  மக்கள் புழங்காத எடம் இயற்கைய அதோட போக்குலயே விட்டு இருக்கற unexplored beautiful region.அங்க இருந்த ஒரு 4 falls ku  சரியான படிகட்டோ  இல்ல பாதையோ இல்ல trek பண்ணி தான் போகணும் .Falls nu சொன்ன ஒடனே குளிக்கற மாதிரி இருக்குமோ nu தான் நெனச்சோம் ஆனா எப்பவும் போல அங்க குளிக்க முடியாது ...அதிரம்பள்ளி மாதிரி பெரிய falls nu அத பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது . Fallsa  பத்த அந்த நொடி எனக்கு தோணுனது "இது தான்  da சொர்க்கம்" இந்த உண்மையான சந்தோஷத்த தொலைச்சிட்டு அல்ப விஷியத்துக்கு ஒடுரோமே nu. .

           மணிகணக்குல queuela நின்னு கோவில்ல சாமிய கிட்ட பாக்குற மாதிரி மணிகணக்கா trek பண்ணி அந்த  water fallsaiyum ஆதி வாசிகள் வாழ்ந்த குகைகளையும் பாத்தா பொது I felt i was tooo close to nature.Nature நமக்கு வெறும் மன அமைதிய மட்டும் தரல..... எத செய்யணும், எத செய்ய கூடாது நும்.... சில விஷங்கள அதோட போக்குலயே விடுறது தான் அழகுனும் சொல்லி கொடுக்குது .எனக்கு வாயனடுல சுத்தும்பொது பாசில் படத்துல பாத்த அந்த green scapes மாதிரியே இருக்கேன்னு தான் தோணுச்சு..... அட chai மக்கு... மாதிரி என்ன மாதிரி பாசில் படங்கள வாய் போலந்து பாத்த எடத்துல தான் இருக்கேன் nu அப்புறம் தான் ஓரச்சிது.வயநாடு நேத்து சமஞ்ச பொண்ணு மாதிரி ஒரு கன்னி தன்மையோட fresha  இருந்தது. என்னோட கவலை இன்னும் 5 வருஷம் அப்புறம் ஊட்டி கோடை மாதிரி இதுவும் குப்பை மேடா ஆகிட கூடாதுன்னு தான்.Modernisation & development ra பேர்ல அதோட அழக இந்த மனுஷங்க கெடுத்ததுட கூடாது
             வாழறத்துக்கு கொஞ்சம் காசு , அழகான கேரளத்து stylea ஒரு வீடு nu வாழ்க்கையோட பின் பகுதிய அர்த்தமுள்ளதா, என் மனசுக்கு புடிச்சா மாதிரி..... வயநாடு போல ஒரு மலைதளத்துல தான் கழிக்கணும் nu விரும்பறேன் . இயற்கைய நேசிக்கற இயற்கைய இன்னும் அனுபவிக்காத இயந்திர உள்ளங்கள் கண்டிப்பா போக வேண்டிய இடம் கேரளம் .இசையையும் இயற்கையையும் ரசிக்காத உங்கள்  உண்டோ ?என்ன பொறுத்த வரைக்கும் இந்த வயநாடு ஒரு வாழ்க்கை அனுபவம்.இது ஒரு ராஜா பாட்டு மாதிரி .....

Tuesday, October 25, 2011

முத்த நாயகன்

முத்த நாயகம் nu நன் சொன்ன ஒடனே சின்ன பாப்பா  la இருந்து பெரிய பாப்பா வரைக்கும் தெரிஞ்சி இருக்கும் நான் யார பத்தி ஜோள்ள போறேன் sorry சொல்ல .ஆமாம் நான் ton கணக்குல ஜொள்ளு விட்டது கமலஹாசன  பாத்து தான் . கமல் இவ்வளோ பெரிய  actor,அவ்வளோ பெரிய நடிப்பு ஞானி நான் இங்க அளந்து  உங்கள மொக்க போடா வரல அவர் எவ்வளோ பெரிய actora இருந்தாலும் எனக்கு கமல் பத்த ஒடனே தோணுற ஒரு விஷம் உஹ்மம்ம்ம்ம் அதாங்க  (பெருமூச்சு).மனுஷன் இந்த வயசுலயும் என்னமா இருக்கான் டா உஹ்மம்ம்மம்ம்ம்ம் இன்னொரு பெருமூச்சு.
                           இப்போ கமல் பத்தி இவ்வளோ ஜோள்ல்றேனே 2004 வரைக்கும் எனக்கு கமல் நாளே உவக் தான். எனக்கும் என்னோட school friends குஹா பிரியா,மஹா லக்ஷ்மி கும் நடுல சண்டையே நடக்கும் . கமல் என்ன பெரிய இவன..... ச்சே அவன் மூஞ்சியும் மொகரையும் அவ..... இவனு nu.... எல்லார் கூடையும் சுத்துறான் அப்படி எப்படி ஏக வசனத்துக்கு பேசுவேன் அவங்களும் ஈடு கட்டி வேலசுவங்க உனக்கெல்லாம் ரசனணு ஒன்னு இல்லவே இல்லd nu வச பாடுவாங்க.அப்படி இருந்த நான் ஒரே நாள்ல.... இல்ல.... இல்ல... ஒரே படத்துல தீவிர கமல் AC யா(fan கூட  இல்லங்க AC note the point) மாறினது எப்படி?
                   எல்லாம் அந்த விருமாண்டி படத்துல தான் start ஆச்சு.சித்தி படத்துக்கு book பண்ணி இருக்கேன்  சொன்னங்க படம் nu சொன்ன ஒடனே என்ன படம்னு  கூட கேக்காம அலைஞ்சி  கிட்டு ஓடினேன் பாத்தா அது உவக் கமல் படம் தலை எழுத்தென்னு தான் பக்க ஆரம்பிச்சேன்.ஆனா படத்துல flashback start ஆனா அப்புறம் வர கமல் la பாத்து அப்படியே வாய்ல இருந்து water falls  வருதுனு கூட தெரியாம அப்படியே ஒக்காந்து இருந்தேன்.அந்த படத்துல கமல் கிட்ட ஒரு ஆண்மை இருக்கும் ஒரு வீரம் இருக்கும் அதா விட எப்பவுமே ஒரு மெல்லிய கிறக்கத்தோட  கூடிய காமப்பார்வை இருக்கும்.Teenageவேற கேக்கவா வேணும் கமல் அபிராமி ku குடுத்த 14 kissaiyum  கண்ணுல வெள்ளகெண்ணெய் ஊத்திட்டு பாத்தேன் .அது வரைக்கும் fav heronu   யாருமே இல்லாத எனக்கு அன்னில இருந்து மனசுல பச்சக் போட்டு ஒட்டிகிட்டாறு  கமல்.

                  நான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்லுவேன் என் கனவுல வந்த முதல் ஹீரோ கமல் தான் ,கனவுல வந்த கமல் என்ன பண்ணாறு? ஆமாம் கனவுல வந்து என்ன தியானமா பண்ணுவாரு பச்சக் பச்சக் nu முத்தம் தான் குடுத்தாரு.
அதுக்கு அப்புறம் தான் நான் கமல் நடிச்ச படங்கள பாக்க  start பண்ணேன்....துணிய  தூகிகொங்க d நெஞ்சிட பொது சொல்லற அளவுக்கு ஜொள்ளு விட்டு பாத்த படம்  ஏராளம் ......  விருமாண்டிக்கு அப்புறம் செம smart  கமல் na அது வேட்டையாடு விளையாடு sabba அதுவும் ரௌடிங்க கிட்ட கேட்டா சாதத்துட  nu சொல்லிட்டு அவர் பாக்குற பார்வை இருக்கே  man u r irresistible..joythika கிட்ட அவரோட பிளஷ்பக் சொல்லும் பொது ஹர்மோன்ஸ் ஏகத்துக்கு ஆட்டம் போடும்......அந்த கமலினி முகர்ஜி நானா இருக்க கூடாத ( இது கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் தான் அனா அசை யார விட்டுது) ....

கஜினி அசின் எப்படி  நாலு கார் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் நு சொல்லுவளோ அதே மாதிரி ஒரு தடவையாது கமல் la நேர்ல கமிக்கரவன தான் கல்யாணம் பண்ணனும் நு ஒரு குறிக்கோளோட இருந்தேன் . நானும் சதீஷும் luvum பொது கமல் la காமிக்கறேன் காமிக்கறேன் nu என்ன ஏமாத்தி  கல்யாணம் பண்ணிகிட்டறு போன வருஷம் இத பத்தி கேட்டா கல்யாணம் ஆனா அப்புறம் என்ன d கமல் la பாக்கணும் நான் தான் இப்போ உனக்கு கமல் nu  என்ன வெறி எத்திடறு.ஆயிரம் தான் சொன்னாலும் கமல் கமல் தான் watta man he issssss உஹ்ம்ம் என்ன பாக்குறீங்க வேற என்ன பெருமூச்சூதான்

மொட்டை மாடி ......

எனக்கு நெனவு தெரிஞ்சி 2002  வரைக்கும் எங்க வீடு ஓட்டு வீடு தான் அதுக்கு அப்புறம் தன மாடி வீடு கட்டினோம் . நான் சின்ன வயசுல இருக்கும் பொது எங்க தெருல 40% தான் மாடி வீடு மத்தது எல்லாமே ஓட்டு வீடு தான் . ஓட்டு வீடுன்னு சொன்ன ஒடனே நீங்க முத்தம், தாழ்வாரம் nu down southla  இருக்கற வீடு மாதிரி கற்ப்பன பண்ணாதீங்க... ஒரு பெரிய hall ,அப்புறம் ஒரு kitchen ,சின்ன வராண்டா அப்புறம் மாடு கட்டி வெக்க கொஞ்சம் பெரிய தொழுவம் அவ்வளவே தான் எங்க வீடு .எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு கோவில் வீடு so tradintional ஓட்டு வீடு   இருக்கற மாதிரி முத்தம்,தாழ்வாரம் நு நல்ல பெருசா இருக்கும்.
                 அப்போலாம் சும்மர் சீசொன்ல மட்டும் தான் கரண்ட் கட் பண்ணுவாங்க, கரண்ட் கட் ஆனா எல்லாரும் மொட்டை மாடிக்கு போவாங்க ஆனா நாங்க மாடி இல்லைனாலே வாசல் படிக்கு வந்துடுவோம்...
எப்படியோ கரண்ட் ஒரு 4 மணி நேரமாது கட் பண்ணுவாங்க home work   பண்றது, தெருவுல அந்த இருட்டுளையும் கண்ணாம்பூச்சி விளையாடுவோம் அப்புறம் ஒரு 8 மணி போல அம்மா சாப்பாடு உட்டிவிடுவங்க மாடில நிலவ பாத்துட்டு சாப்டுற மாதிரி வாசல் படில ஒக்காந்து நிலவ பாத்துடே சாப்டுவேன்.
         நான் ஒரு 8 std படிக்கும் பொது எங்க தெருல எல்லா வீடும் மாடி வீடு ஆயிடுச்சு சொல்ல போன இந்த பக்கம் மாடி வீடு அந்த பக்கம் மாடி வீடுnu எங்க வீடு மாட்டும் தான் ஓட்டு வீடு அப்போ கொஞ்சம் ஏக்கமா இருக்கும் ச்ச என்னடா இது நாம எப்போ தான் மாடி வீடு கட்டுவோம் ... நாமலும் எப்போ தான் மொட்ட மாடில நடந்திட்டே படிக்கறது,நிலவ பாத்து சாப்டுறது,படுக்கறது நு...
                 எங்க அத்தை வீட்டுக்கு  summer leave ku போவேன் அவங்க வீடு பெரிய மாடி வீடு அத்த எங்களுக்கு சமச்சி சப்பட மாடிக்கு கொண்டு வந்துடுவாங்க நாங்க சுத்தி ஒக்காந்து சாப்பிடுவோம் அப்போலாம் என்னோட அந்த சின்ன அல்ப மாடி ஆசை கொஞ்சம் அடங்கும்..பாய விரிச்சி படுத்து stars a பாத்துகிட்டு எல்லாம் கதையும் நானும் என்  cousinsum  பேசுவோம்.வீடுன்றது வெறும் கட்டடமா இல்லாம நம்மள ஒருத்தரா இருந்துச்சு அது தான் என்னோட மாடி ஏக்கத்துக்கு இரு பெரிய காரணம் நெனைக்கறேன் இப்போ மாடி வீடு இருக்கு ஆனா அதா ரசிக்க நேரமும் இல்ல ரசிக்கற அந்த குழந்தை மனசும் இல்ல infact மாடிக்கு போறதையே ஒரு பெரிய வேலையா நெனைக்கறோம்.
          Recenta வந்த பாடல்கள நான் அடிகடி முணுமுணுக்கும் songna அது அங்காடி தெரு படத்துல வர "கதைகளை பேசும்  விழி அருகே "  ........ பாடல் ....... especially அதுல வர அந்த வரி " வெறும் தரையில் படுத்து கொண்டே விண்மீன் பார்ப்பது யோகமடி" ஏனோ இந்த வரிய கேக்கும் பொது  i get emotional.இந்த பாட்ல வராமாதிரி life  அவ்வளோ simplea....easya.... இருந்த எவ்வளோ நல்ல இருக்கும்

Friday, October 21, 2011

அலப்பரைகள்

எவ்வளோ நாள் தான் பொண்ணுகள கலச்சியே எழுதறது பசங்க என்ன ரொம்ப பொறுப்பான பருப்புங்கள? பொண்ணுங்கள விட பசங்க செய்யற அலப்பற தான் ஜாஸ்தி அப்படி பட்ட சில அலப்பரைங்கள   பாப்போம்....

                    பொண்ணுங்க எப்பவுமே கடுகு மாதிரி எண்ணெய்ல போட்ட ஒடனே பொரிஞ்சி தள்ளிடுங்க ....ஆனா இந்த பசங்க இருக்கானுங்களே "dai உங்களுக்கெல்லாம் என்னடா பிரச்சனணு"? கேட்டாலும்... ம்.... ம்.... அந்த வாயவே தெறக்க மாட்டனுங்க தம்பி....... ராசா.....வாய் அப்படின்றது வெறும் ....... சாப்ட மட்டும் இல்லப்பா கொஞ்சம் பேசவும் தான் nu  கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினாலும்..சச்சின் படத்துல வடிவேலு சொல்லற மாதிரி எவ்வளவு முக்குனாலும்  நடக்காது nu இருபங்க .. எத கேட்டாலும் உஹ்ம் உஹ்ம் நோresponse...ரொம்ப நல்லவன்டா  நீ nu வடிவேலு ஸ்டைலிய நாம பாட்டுக்கு சொல்லிடு போய்டே இருக்கவேண்டியது தான்.   
               
                   இதுல expression nu  ஒரு தனி mattere  இருக்கு அப்பா.... சாமி அப்படி நீ மனசுக்குள்ள என்ன தான் da நெனப்ப.....இடியே விழுந்தாலும்    bluntaவே மூஞ்சிய வேச்சிகவேண்டியது இதுல சிலதுங்க காக்கி சட்டைக்கு காஞ்சி போட்ட மாதிரி  எப்பவுமே வேறப்பா சுத்த வேண்டியது......கேட்ட நாங்க எல்லாம் பக்குவ பட்டவர்கள் nu  ஒரு bitu  வேற....இவனுங்க சிரிக்கரனுங்க nu நாம சிரிக்கவும்  முடியது வருத்தமா இருகரனுங்கனு பாவ பாடவும் முடியாது "freeya vidu   மச்சி nu" நமக்கே மொக்க குடுபனுங்க .
                  
                     இதெல்லாம் விடுவோம் இந்த IT கம்பெனில வேலைக்கு போறவங்கள பத்தி பேசின நாள் கணக்குல பேசிட்டே இருக்கலாம் அதுலயும்  இந்த  friday வந்தாலே போதும் விடியுதோ இல்லையோ நம்மாளுங்க cool club  மாதிரி கடைங்கள்ள 3 னுக்கு ஆறு ப்ரீnu  வாங்குன tshirtsa  போட்டுக்கிட்டு....இவனுங்க விட ரவுசு இருக்கே யப்பா .....பொண்ணுங்க கூட fridaysla  சில times அடக்கி வாசிப்பாங்க ஆனா இந்த பசங்க அடங்கவே மாட்டனுங்க.....t shirt என்ன nike shoes என்ன.....sneakers வேற இதுல புதுசா add  ஆகி இருக்கு.....இதுல எதாச்சும் ஒருத்தங்க tshirt  நல்ல இருக்கும்னு சொல்லிட கூடாது வீட்டுக்கு வந்து .......இருக்கறவங்க போதும்  da சாமி nu  கால விழுற வரைக்கும் விடாம reel ஓட்டுவானுங்க...
           
                  மக்களே இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா பொண்ணுங்கள விட இந்த தடி பசங்கள புரிஞ்சிகறது ரொம்ப ரொம்ப குஷ்டமப்பா ......இவங்கள பாப்பா நு அணைக்கவும் முடியாது பாம்புமு nu  அடிக்கவும் முடியாது... சுருக்கமா சொல்லனும்ன இந்த பசங்களோட வாழவும் முடியாது..... பசங்க இல்லாமலும் வாழ முடியாது .

P.S:
 மேற்கொண்ட post யாரையும் directa வோ indirecta வோ point பண்ண அல்ல எல்லாமே என் சொந்த சோக அனுபவங்கள் .
 

Thursday, October 20, 2011

ரயில் பயணங்கள்

நம்ம  life எப்பவுமே கொழல வர தண்ணி மாதிரி இருந்தா செம  bore அடிச்சிடும் அதுல.... அப்போ அப்போ தண்ணி lorry மாதிரி  அதிரடியா ,ஆர்பாட்டமா ,interestinga எதாச்சும் விஷயம் நடந்துகிட்டே தான் இருக்கும் .ஆனா என்ன மாதிரி எரும மாடு மேல மழை பெஞ்சா மாதிரி இருகறவங்களுக்கு இதெல்லாம்  interesting matter nu தெரியாமையே இருக்கும்.அப்படி  பட்ட ஒரு incidenta  இப்போ உங்க கூட  நான் share  பண்ண போறேன். எப்பவும் போல அன்னைக்கு  afternoon lunch  முடிச்சிட்டு நான் ராம்,அருண் seata  தேச்சிட்டு இருந்தோம் எங்கையோ start  ஆனா topic கடசில train joruneys  கிட்ட வந்து நின்னுச்சு,அப்போ நான் சொன்னேன் எனக்கும் train journeyல கொஞ்சம் நல்ல experience  தான் நடந்து இருக்குnu ஒடனே அருண் அப்படியா ? எங்க ஒன்னு சொல்லுங்க பாப்போம் nu வழக்கம் போல வாய கிண்டினாறு ,நான் title card  போடும் போதே சொன்னேன் கிண்டல் பண்ண கூடாதுன்னு...அதே தான் படிக்கற உங்களுக்கும் no kalachifying OK இப்போ கதைக்கு வருவோம் அப்போ நான் hyderabad la  வேல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான்  noidala  இருந்து கெளம்புங்க காத்து வரட்டும் எங்கள சென்னைக்கு தொரத்தி விட்டுட்டாங்க.
                       ஒரு சின்ன  training  காக என்ன  hyd அனுப்பி வெச்சாங்க.Hyd போய் ஒரு வாரம் மொக்கைய தான் போச்சு அப்புறம் noidla  இருக்கற என் friends ஐடியா குடுத்தாங்க ....சுருக்கமா சொல்லனும்ன உசுப்பி விட்டாங்க ....weekend  என்ன வெட்டியா தானே  இருக்க hydla  இருந்து noida  கிட்ட தான், So  traina  புடி noida வா இங்க இப்போ winter  வேற so நல்ல enjoy  பண்ணாலாம்nu...நாம வேற வானம் பத்த பூமியா அதனால winter  நு சொன்ன ஒடனே நான் அலஞ்சிகிட்டு ப்ளான் போட்டேன் வெறும் ரெண்டு நாளைக்கு noida ku போறது   waste nu ...  ஒரு 4 days  ப்ளான் போட்டேன் அந்த நாலு நாள்கு நான் 6  நாள் night shift  பாத்தேன் .ஒரு வழிய லீவ் வாங்கியாச்சு train ticket tatkaal   ல புக் பண்ணிட்டேன்.பொதுவா north  ட்ரைன்ல ஒரு பொண்ணு தனியா sleeper   கோச்ல travel  பண்றது 200% unsafe ஆனா நான் அதெல்லாம் கொஞ்சம் கூட think  பண்ணாம டிக்கெட் புக் பண்ணி வெச்சிட்டேன். வெடிய காலைல 3 மணிக்கு secund stationla train.ஆபீஸ் caba  புடிச்சி ஸ்டேஷன் போயாச்சு TTR  கிட்ட check  பண்ணும் பொது தான் சொன்னாரு  யாரோ 3rd AC la ticket கான்செல் பண்ணி இருகாங்க அதுனால் எனக்கு 3rd AC la seat   குடுத்து இருக்காங்கனு கூம்புடுறேன் சாமி nu  என்  seta கண்டுபுடிச்சி போன சூப்பர்.......side lower berth..... செம குஜால்ச போய் compartmentla யாரு இருகாங்கனுலாம் பாக்காம ஆறு நாள் நைட் ஷிபிட் பாத்த tierdla இழுத்து பொத்திட்டு தூங்கிட்டேன் விடிய காலைல  3 ku ஆரம்பிச்ச தூக்கம் நைட் 10 ku  தான் முழிச்சேன்.அப்போ தான் என் compartmentla யாரு இருக்காங்கனு பாத்தேன் 2  குண்டு செட்டு  aunties அப்புறம் 1 uncle அவங்க கூட வந்த 4 குட்டி   பசங்க ..... அப்பா.... family  தான் இருகங்கனு ஒரு நிம்மதி. பக்கத்து compartmentla பாத்தா   எல்லாரும் பசங்க சும்மா ரசகுல்ல மாதிரி இருந்தானுங்க hmmm .நான் எழுந்துக்கும்  போது  எல்லாரும் dinner  சாப்டுட்டு இருந்தாங்க நான் அப்போ தான் போய் brush பண்ணிட்டு வந்தேன் காலைல இருந்து இந்த பொண்ணு எழுந்துக்கவே இல்ல ஒரு quatera  விட்டு தூங்குதா இல்ல எதாச்சும் பிரச்சனைய  nu அவங்க என்ன பத்தி என்ன நெனச்சி இருப்பாங்கnu  ...அவங்க என்ன ஒரு look  விட்ட போதே தெரிஞ்சிது.... ஆனா அந்த குண்டு aunties  நல்லவங்க இப்போ நைட் 10  மணி உனக்கு சாப்ட எதுவும் கெடைக்காது எதாச்சும் சப்டுரியானு கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம்  broken இங்கிலீஷ் la  கேட்டாங்க நான் ரொம்ப decenta   வேணாம் nu  சொல்லிட்டேன்.

                      இதுல அந்த gang of  பசங்க வேற செம லவ் torture  நாங்க சாப்பாடு order  பண்ணி இருக்கோம் ஒரு extra சாப்பாடு   இருக்கு நீங்க சாப்டுங்க nu .... எவ்வளவோ வேணாம் nu சொல்லியும் கேக்காம எனக்கு ஒரு டப்பா குடுத்தாங்க இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு ரசகுல்லாவோட சாப்பாடு  இதுல சாப்பாடுக்கு காசு வேற வாங்கல சரிப்பா நமக்கு ஒரு 90 மிச்சம் . நம்ம தான் ஆந்த மாதிரி காலைல FULLA  தூங்கிடோமே எங்க தூக்கம் வரும் அப்படியே ஜன்னல் வழிய வெடிக்க இருட்டுல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான் அந்த gangla  இருந்த ஒரு பையன் சும்மா பேச்சு குடுத்தான்.பக்க நல்ல talla & slime figureoda  இருந்தான் இதுல french beard  வேற :) கக்கி கார்கோஸ் with  கிரீன்  & வைட் tshirt போட்டு இருந்தான் அவங்க எல்லாம் ஒரு basket ball  மேட்ச் ku hyd வந்தாங்களாம்.They are from himachel pradesh num  டெல்லி போய் அங்க இருந்து ஹிமாச்சல் போனும்னு சொன்னான்.can i sit with you ? கேட்டான் காச பணமா ஒக்காந்து கொன்னு சொன்னேன் ... நமக்கும் நைட் தூக்கம் வரது so இவன் கூட கொஞ்ச நேரம் மொக்கைய போடலாம் nu  ஒரு யோசனை.அவன் ஒரு ஸ்டுடென்ட் aam  lab technician course படிச்சிட்டு இருக்கேனும் சொன்னான் நானும் நான் இங்க வேல பாக்குறேன்..... என்னோட friendsa  பக்க noida  போறேன்னு சொன்னேன்.அப்புறம் ஒரு 4 மணி நேரம் நெறைய பேசினோம் cinema,culture,food,gals nu என்ன என்னமோ ........

                     இதுக்கு நடுல  அவனுக்கு கிடார் வாசிக்க தெரியும் num  அவன் கிடார் வெச்சி இருக்கேன்னு சொன்னான் ."shall i play guitar for you ?" nu வேற கேட்டான் வெடிய காலை  4 மணிக்கு.... அப்பா..... ராசா அதெல்லாம் வேணாம் நம்மல compartmente காரி துப்பும் இப்போ வாசிச்சனு சொன்னேன்....( slighta உங்களுக்கு  வாரணம் ஆயிரம் படம் ஞாபகம்  வருதுனு எனக்கு புரியுது ஆனா என்ன பண்றது நடந்தத தானே  சொல்ல முடியும்..)
                அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விடிய ஆரம்பிச்சிது நான் nizamudin  ஸ்டேஷன் ல எறங்கணும் ஸ்டேஷன் வந்தா   கொஞ்சம் சொல்லுனு கேட்டேன்.ரொம்ப நேரமா  train ஒரு ஸ்டேஷன் ல நின்னுச்சு நான் இது தான் nizamudina nu கேட்டதுக்கு இல்லன்னு சொன்னான் ஆனா எனக்கு என்னமோ அது தான் nizamudin nu  தோணுச்சு ஏதோ ஒரு குருட்டு தெரியத்துல எறங்கிட்டேன்..... நல்ல வேல அது தான் நான் எறங்க வேண்டிய ஸ்டேஷன் நான் மட்டும் தப்பான ஸ்டேஷன் ல எங்கியாச்சும் UP  கும்  delhi kum  நடுல எறங்கி இருந்தேன் அவ்வளோ தான் நாரி இருப்பேன்...
                   இந்த கத நடந்து ஒரு 4 வருஷம் இருக்கும் இத நான் எப்பவும் நெனச்சி பாத்ததே இல்ல நெனச்சி  பாக்குற அளவுக்கு இது ஒரு  matterave எனக்கு தோணவும் இல்ல இந்த கதைய நான் ராம்,அருண் கு சொன்ன ஒடனே சூப்பர் சந்தியா செம இண்டரஸ்டிங்..... தனியா...... அதுவும் டெல்லி கு போற வழில ஒரு  பையன் குட நைட் fullla கடலை போட்டு  இருக்கீங்கனு.....   இத என்னமோ ஒரு காப்பியம் மாதிரி பேசினாங்க. ஆனா கொஞ்சம் யோசிச்சி பாத்த அதுவும் கரெக்ட் தான் தனியா train travel ..... நைட் ஒரு smartana  பையன் கூட மொக்க....... கொஞ்சம் இண்டரஸ்டிங் தான்la.... ஆனா இவ்வளோ ஞாபகம் இருந்த எனக்கு அந்த பையன் பெரு கடைசி வரைக்கும் ஞாபகமே வரல நானும் படுத்து யோசிச்சேன் ,ஒக்காந்து யோசிச்சேன், நின்னுடு யோசிச்சேன்...... ம் ம் சுத்தமா ஞாபகம் இல்ல .......டேய்  உன் பெரு தான் என்னடா?? 

Wednesday, October 19, 2011

நினைவில் நின்றவை 70's - 1

நாம எவ்வளோ படம் பாத்தாலும் நம்ம மனசுக்குள்ள பச போட்ட மாதிரி ஒட்டிகறது சில படங்கள் தான் அதுவும் அந்த படங்கள  ரெகார்ட் தேயற அளவுக்கு பாத்தாலும் நமக்கு அலுக்கவே அலுக்காது அப்படி எனக்கு புடிச்ச ரெகார்ட் தேஞ்ச சில பல  70's la  வந்த  படங்கள பத்தி பாப்போம்...... ஏதோ நான் பாப்போம் நு சொன்ன ஒடனே நான் என்னமோ அறிவு ஜீவி திரை பார்வை மதன் மாதிரியோ இல்ல, சினிமா விமர்சனம் அருமையா எழுத கூடிய என்னோட பிரண்ட் மகேஷ் மாதிரியோ நு நினைக்காதீங்க சாமி சத்தியமா எனக்கு அதெல்லாம் சுத்தமா தெரியாது நமக்கு தெரிஞ்ச சினிமா ஜில் ஜங் ஜக் expansion  உங்களுக்கே தெரியும் சூப்பர் படம்  - ஓகே படம்  - படு மொக்க படம் அவ்வளோ தான். நான் பார்து இன்னும் பாத்துகிட்டு இருக்கற சில படங்களை பற்றி...



எதிர்நீச்சல்(1968) :
இந்த படத்த பத்தி மகேஷ் கிட்ட ஒரு poste எழுத சொன்னேன் அந்த அளவுக்கு நான் இந்த படத்தோட செம luver .  நாகேஷ்,முத்துராமன்,ஜெயந்தி,மேஜர் சுந்தர்ராஜன்.. பல அருமையா நடிகர்கள் நடிச்ச நம்ம KB  direct பண்ண படம் இந்த படத்த எப்பவும் போல முதல் முதல்ல நம்ம பொதிகைல தான் பாத்தேன் அப்புறம் பல தடவ இந்த படத்த rajashri.com la பாத்து இருக்கேன். இந்த படத்த பாக்கும் பொது ஒரு positive energy  என்னக்குள்ள create ஆகும். சீர்காழி கோவிந்தராஜன் குரல்ல " வெற்றி வேண்டுமா போடு பாரடா எதிர்நீச்சல்" பாட்ட கேக்கும் பொது கண்டிப்பா ஒரு தெம்பு பிறக்கும் .


காசே தான் கடவுளடா(1972):
தேங்காய் ஸ்ரீநிவாசனோட The best performance nu  தான் சொல்லணும் முத்துராமன், ஸ்ரீகாந்த்,லக்ஷ்மி,மனோரம்மா,வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்ச படம்.அதே அதே சபாபதே  nu  பணத்த கொள்ளியடிக்க அவங்க போடுற plans   எல்லாம் செம hilarious இந்த படத்த எழுதி  direct பண்ணது சித்ராலய கோப்பு ,he is one of the best writer in tamil cinema.

காசி யாத்திரை(1973):
இந்த படம் அதிகம் பிரபலம் இல்ல VK ராமசாமி ,மனோரம்ம,ஸ்ரீகாந்த்,சுருளி ராஜன்,சோ நடிச்ச படம் இந்த படத்துக்கு என்னமோ ஸ்ரீகாந்த் தான்  official heroஆனால் படத்தோட உண்மையான hero & heroine  நம்ம VKR & மனோரம்மா தான். மனோரம்மா இந்த படத்துல dual role  பண்ணி இருப்பாங்க. ஒரு சந்நியாசி எப்படி ஒரு நாடக காரி மேல ஆச பட்டு அவங்க சதி கும்பல்ல சிக்கி அவஸ்த்த படுறாரு அது தான் இந்த படத்தோட  main plot.இந்த  நடககாரிய படத்துல  வர மனோரம்மாவோடbody language extremely superb....

வா ராஜா வா:
 இந்த அப்படம் எந்த வருஷம் release  ஆச்சுனு எனக்கு தெரியல அப்போ master பிரபாகரன் ரொம்ப famous  கிட்ட தட்ட எல்லா படத்துலயும் பிரபாகரன் இருபாரு. எல்லா child artist போல அதிகப்ரசங்கி தனம் இருந்தாலும் ஒரு innocence  இருக்கும் பிரபாகரன் கிட்ட.... இந்த படத்தோட ஹீரோ master  தான் மகாபலிபுரத்துல tourist guidea இருக்கற சின்ன பையனுக்கு ஒரு சிற்பி friend .அந்த சிற்பி கிட்ட இருக்கற ஒரு கல்லுல செதுக்க பட்டு இருக்கும்  பழமொழிகள் அந்த பையன் வாழ்க்கைல அனுபவ படமா நடக்கும் இது தான் படத்தோட கதை சுருக்கம்.நான் இந்த படத்த school படிக்கும்  பொது பாத்தேன், so என்ன இந்த பட ரொம்ப attract பண்ணிடுச்சு  A.P Nagarajan direct பண்ண படம் இது.

கலாட்ட கல்யாணம்(1968)
சிவாஜி கணேசன் முதல் முதல ஜெயலலிதா கூட  ஜோடி போட்ட படம் . 4 பொண்ணுங்களுக்கு பையன் பத்து வெச்சிட்டு தானும் தன் காதலிய கை புடிக்க பாடுபடும் hero va பத்தின கதை.இந்த படத்துல சிவாஜி,நாகேஷ்,முத்துராமன்,கோபாலகிருஷ்ணன்,தங்கவேலு,சோ அந்த காலத்துல வந்தmulti start cast movie.இது ஒரு typical comedy entertainer ரகம்.

நான்:
ரவிச்சந்திரன்,ஜெயலலிதா,நாகேஷ்,மனோரம்மா நடிச்ச படம். பல கோடி ருபாய் சொத்துக்கு வாரிசு யார்  nu நடக்கற போட்டி தான் படம்.மனோகர் , நாகேஷ்,ரவிச்சந்திரன் இந்த மூணு பெரும் அந்த சொத்துக்கு போட்டி போடுறாங்க யார் உண்மையான வாரிசு கண்டுபுடிக்கறது தான் கதை நிறைய comedy கொஞ்சம் thrilling  nu படம் ரொம்ப நல்லாவே போகும் .

ரங்கா விலாஸ்:
VK ராமசாமி நடத்திடு இருக்கற lodgela  காசே குடுக்காம ஜெய்ஷங்கரும்  நாகேஷ் தங்கி lodege inmprove பண்றேன் பேர்வழி lodegela raid  நடக்க கரணம் ஆகிடுறாங்க . Police kitta சிக்கி lodge  கை  விட்டு போய்.. மனமும் போய்  நாகேஷையும் ஜெய்  yavum தேடு தேடு  தேடுறாரு இதுக்கு நடுவுல நாகேஷ் ஒரு பொண்ண காதலிச்சு கல்யணம் பண்ணி சந்தர்ப்ப சூழ்நிலையால தலைமறைவு வாழக்க வழராறு . நாகேஷ் செத்த மாதிரி  ஆவி ரூபத்துல வந்து VKR.... மிரட்டறது..... இந்த கூத்துக்கு நடுவுல  ஜெய் வாணிஸ்ரீ yin காதல் nu  இதுவும் செம comedy கலாட்ட

பாமா விஜயம்:
இந்த படத்த பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியது இல்ல அளவுக்கு அதிகமான ஆசை எவ்வளோ தப்பு  ரொம்ப அழக சொல்லி இருப்பாரு KB ஒரு நடிகையின் ( ராஜஸ்ரீ)  வரவுக்காக தகுதிக்கு மீறி செலவு செய்யும் மகன்கள் ( மேஜர் சுந்தர்ராஜன் , நாகேஷ், முத்துராமன் ) பேராசை படும்  மருமகள் ( ஜெயந்தி ,காஞ்சனா, சௌகார் ஜானகி ) குடும்பத்தை கட்டி காக்கும் மாமனாராக  பால்லையா ரொம்ப கருத்துள்ள நகைச்சுவை படம் .

இது மாட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ படங்கள் காதலிக்க நேரம் இல்லை,ஆயிரம் பொய்,அத்தையா மாமிய, நீ , உத்தரவின்றி உள்ளே வா,சுமதி என் சுந்தரி,ஊட்டி வரை உறவு,கண்காட்சி nu பல படங்கள் ஒவ்வொரு படத்த பாக்கும் போதும் ஒவ்வொரு ஞாபகம். ஞாபகத்த மீறி செம குஷி மனசுக்குள்ள வந்துடும். 











Tuesday, October 18, 2011

season greetings...

சின்ன வயசுல இருந்து நம்மள பெரிய leavela attract  பண்ற   festival na அது தீபாவளி தான்..தீபாவளி nu  சொன்ன ஒடனே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் excite ஆகிடுவோம்.நம்ம lifestyle  காலத்துக்கு ஏத்தா மாதிரி design deisgna   எப்படி மாறி இருக்குங்கறதுக்கு பெரிய example நம்ம கொண்டாடுற festivals ye  வெளிப்படுது.சின்ன வயசு தீபாவளி ஞாபகம் எல்லாம் காலைல எண்ணெய் தேச்சி குளிக்கணும் அப்புறம் புது டிரஸ் போட்டுகிட்டு அப்பா வாங்கி தந்த அந்த ரெண்டு டப்பா கம்பி மத்தப்ப பூர கொளுத்தி முடிச்சிட்டு அவசர அவசரமா ஏதோ  சாப்டுட்டு எதுத்த வீடு பசங்க என்ன வெடி வேடிக்கரங்க  நோட்டம் விட்டு அபப்டியே TV முன்னாடி போய் ஒக்கரவேண்டியது..... சாயங்காலம் பாட்டி வீட்டுக்கு போய் அங்க சித்தி வாங்கி வெச்சி இருக்கற வேடிங்கள கொஞ்சம் கொளுத்திட்டு திரும்பவும் டிவி பாக்க ஓட வேண்டியது.எங்க தெருவுல யார் வீடு முன்னாடி அதிக பட்டாசு கொளுத்துன பேப்பர் இருக்கோ அவங்க தான்  மாஸ் அதுக்கு பெரிய சண்டையே நடக்கும் ..... எங்க அப்பா 2 டப்பா கம்பி மத்தாப்பு  2 டப்பா புஸ்வானம் தவிர ஒன்னும் வாங்கி தரமாட்டரு,so நான் lam போட்டிக்கு qualifye  ஆகா மாட்டேன் :(


    College படிக்கும் பொது தீபாவளி அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தீவாளி ஆச்சு அப்போ வேடில பெரிய interest ஒண்ணும் இல்ல ஆனா புது dress நிறைய வாங்கணும்  supera stitch பண்ணனும்.... லேட்டா தூங்கி எழுந்து நல்ல சப்பட்டு டிவி ya  விட்டு நகர கூடாது nu ....மினுக்கரதுல தான் ஆர்வம் ஜாஸ்தி இருந்துச்சு....அப்புறம் நமக்கும் ஒரு புண்ணியவான் வேல குடுத்தானா...... அது தான்  24 * 7 வேலை ஆச்சே so நல்ல நாள் கேட்ட நாள் nu  ஒண்ணு கிடையாது தீவாளி ku எண்ணெய் தேச்சி குட குளிக்க மறந்து shift shift nu ....ஆபீஸ் ஜன்னல் வழியா  shotsa பாத்துடே வேல பாக்கவேண்டியது தான்.... என்ன ஒரே அறுதல் தீவாளி அன்னைக்கு வேல பாத்தா 1000  lifestyle giftvoucher  கிடைக்கும் நல்ல சாப்பாட்ட miss பண்ணுவேனே தவிர மத்த படி தீவாளி ஒண்ணும் பெருசா impact create  பண்ணால...அதுக்கு அப்புறம் வந்த தீபாவளிகள்  படு மொக்கை ராகம்.....ரொம்ப நாளைக்கு அப்புறம்  தீவாளி excitementoda வந்து இருக்கு வெறும் புது  dresskaga மட்டும் இல்ல...... dichu ku  விவரம் தெரிஞ்சி அவ மத்தாப்பை ரசிக்க ஆரம்பிச்ச அப்புறம் வர தீவாளி இது.....நேத்து  shopping போயிட்டு  வரும் பொது சதீஷ் போலம்பினது தான் ஞாபகம் வருது "வெறும் 300 ரூபாய்க்கு புது  dress எடுத்து 2 டப்பா வெடி வாங்கி வெடிச்ச பொது இருந்த சந்தோஷம் இப்போ 5 ஆயிரத்துக்கு dress எடுத்து  10 ஆயிரத்துக்கு வெடி வெடிக்கும் பொது கிடைக்கல lifela simplicitye போய் வெறும் complexity  தான் மிஞ்சுது" .சந்தோஷமா இருந்த பண்டிகை வெறும் சடங்கா மாறி ரொம்ப வருஷம் ஆகுது அது மீண்டும் சந்தோஷமா மாற நான் வேண்டிக்கறேன்.......wishing all you & your family a happy diwali.....

அழகி

அழகி போட்டில   ஒரு அழகிய எப்படிselect  பண்றாங்க?  இந்த கேள்விய நாம models  கிட்ட கேட்டா வெறும் அழக அடிப்படைய வெச்சி select  பண்றது இல்ல.....last roundla  பதில் சொல்ல அறிவு ரொம்ப முக்கியம் nu  சொல்லுவாங்க வெறும் அழகு அறிவு மட்டும் இருந்துட்டா  அவ அழகி ஆகிடுவாளா??
     இப்போ எனக்கு எதுக்கு இந்த doubts nu நீங்க கேக்குறது எனக்கு புரியுது சத்தியமா நான் அழகி போட்டிக்கு போகற அவளுக்கு மனசாட்சி இல்லாதவ இல்ல...
பின்ன வேற என்ன ____________ இந்த doubts nu  கேக்குறீங்க தானே உங்க mind voice nan cathch பண்ணிட்டேன்......recenta நான் பார்த்த ஒரு புகைப்படம் என்ன ரொம்ப வெறி ஆகிடுச்சு
  ஒரு பெண் எப்போது  பெண் ஆகிறாள்? பாக்யராஜ் stylea கேட்ட என்னோட பதில் " அவள் தாய்மை அடையும் பொது தான் " பொண்ணுங்களுக்கு naturala ve oru motherly feeling உண்டு ஒரு அக்கா தன தம்பி கிட்ட எவ்வளோ தான் சண்ட போட்டாலும் எதாவது ஒரு தருணதுல அவ அம்மாவா அவன அரவணாச்சி இருப்பா.....அதுவும் அவ pregnaneta  இருக்கும் பொது அவளுக்கு எவ்வளவு மாற்றங்கள் உடல் அளவு இருந்தாலும் அத எதையுமே பொருட் படுத்தாம ரொம்ப சந்தோஷமா பெருமையா தான் தாய் ஆகா போறோம்னு மனசுக்குள்ள கொண்டடுவா....சாதர்ண படித்த ....படிக்காத பொண்ணுங்க எல்லாருமே இப்படி தான். ஆனா ஒரு உலக அழகி தன்னோட  baby bumpa மறைக்க அரும்பாடு படுறா...

recent timesla.....உலக அழகி ஐஸ்வர்யா ராய் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் தன்னோட வயத்த துப்பட்டாவால் மறைச்சிகிட்டு தான் போறா ... எம்மா ஐசு முழு புசணிக்காய சொத்துல மறைக்க முடியாதுனு உங்களுக்கு தெரியாதா??? நீங்க என்ன 16  வயசு பொண்ணா சிக்கிரம உண்டாகிட்டா அதன் பொண்ணு வெக்க படுதுன்னு சொல்ல இல்ல நீங்க கர்ப்பமா இருக்கறது யாருக்குமே தெரியாத???? இல்ல தெரியக்கூடாத.... இல்ல இதனால உங்க cinema carrer post pregnancy   பதிக்க படுமா???? உங்க baby bumpa  மறைக்க எல்லா உரிமையும்  உங்களுக்கு உண்டு அனால் தாய்மையின் அடையாளத்தை மறைக்க விரும்புவது ஒரு அழகிக்கு அழகா????


உங்களோட சம கால  போட்டியலரா கருதப்படும் சுஷ்மித சென் ரெண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தான் போகும் எல்லா இடங்களுக்கும் அவர்களை பெருமையுடன் அழைத்து செல்கிறார்...நாங்க உங்கள தத்து எடுத்து வளக்க சொல்லல  ஆனா தான் முறையா பெத்துக்க போற குழந்தையோட baby bumpa  நீங்க மறைகரதுக்கான காரணம்  என்னனு சத்தியமா எனக்கு  புரியல நடிப்புல பல சிகரம் தொட்டவங்களா நீங்க இருக்காலம்  ஆனால் என்னை பொறுத்த வரை நீங்கள் அழகி அல்ல....

Friday, October 14, 2011

கல்யாணம் .....?????,,,,,,,

ஒருத்தன் கஷ்டம் இன்னொருத்தனுக்கு சந்தோஷம் அது எதுல பொருந்துமோ இல்லையோ கல்யாணத்துல நல்லாவே பொருந்தும்.அவன் கடைசியா சிரிக்கறது அப்போ தான் அதுக்கு அப்புறம் அவன் பொழப பாத்து ஊரே சிரிப்பா சிரிக்கும் இதுக்கு நடக்குற கூத்தும் கும்மாளமும் இருக்கே அப்பா சொல்லிமாளாது.
                   என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கல்யாணம் நாளே  செம ரகள தான் . Shopping போறதுல ஆரம்பிச்சி  invitation குடுக்கறதுல தொடங்கி உனக்கு தான் first invitation  குடுக்கறேன்னு பல பேர்கிட்ட கப்சா விட்டு மக்க மனுஷங்கள ஒன்னு தேரட்டி கல்யாணம் பண்ணி முடிக்கறதுக்குள்ள சப்பா கண்ணுமுழி பிதிங்கிடும்.
 North sidela கல்யாணம் நைட் ல தான்  நடக்கும் so நம்மளோட invitationla முகுர்த்த டைம் பார்த்த ஒடனே நம்ம  northiee பிரெண்ட்ஸ்  கேக்குற first  கேள்வி" god damn how do  u manage for an 6 am wedding"? அவனுக்கு எங்க தெரியும் நம்ம புள்ளையாண்டான் தூக்க கலகத்துல கல்யாண பொண்ண இல்ல அவங்க அம்மாவானு பாக்காம கெட்டிமேள சத்தம் கேட்ட ஒடனே rightla திரும்பி கைக்கு கிடைக்கற  கழுத்துல தாலிய கட்டுவான்னு
         நம்ம ஊரு கல்யாணத்துல தான் எவ்வளோ variety நாடார்,முதலியார்,தேவர்,கோனார்,அய்யர், அய்யங்கார் , பிள்ளை ( இதுல சைவம் அசைவம்  வேற) தெருவுக்கு தெரு இருக்கற பிள்ளையார் கோவில விட caste & sub caste ஜாஸ்தி .ஒவ்வொரு casteukum  ஒவ்வொரு மாதிரி சடங்கு இதுல லவ் marriagena பையனும் பொண்ணும் செத்தாங்க . 
          எனக்கு என்னமோpersonala  கல்யாணம் நாளே குஷி ஆய்டுவேன் என்னமோ ஒரு ஜாலி மூட் வந்துடும் நல்ல டிரஸ் பண்ணிக்கலாம் நகை போட்டுக்கலாம் அத விட முக்கியம் நம்ம எல்லா சொந்த பந்தத்தையும் பாக்கலாம்  .
               எனக்கு ரொம்ப புடிச்ச கல்யாண culturena  அது அய்யர் வீட்டு கல்யாணங்கள் தான் 3    நாள் கல்யாணம் நடத்தி கொண்டடிடுவாங்க.நிறைய சாஸ்திரம் சம்பிரதாயம் இருந்தாலும் 3 நாள்  கல்யாணத்துல இருக்கற குஷி கொண்டாட்டம்... விரதத்துல start பண்ணி ஊஞ்சல், காசி யாத்ரா,அப்புறம் கண்ணியதனம் , விளையாடல்.... கட்டுசாதம் nu முடிக்கற வரைக்கும் ஒரே கலர்புல் தான்.மொத்ததுல எந்த caste  கல்யாணம்னாலும்  sight அடிகரதுல ஆரம்பிச்சி சண்ட வரைக்கும் கல்யாணத்துல நடக்குற எல்லா விஷயமும் தமாஷ் தான்.............infact  ரொம்ப தமாஷ் ....

Thursday, October 13, 2011

PKT நினைவலைகள்

PKT nu சொன்ன ஒடனே நீங்க ஏதோ தாஜ் மஹால் இல்ல திருமலை நாயக்கர் மஹால் நினைசிடதீங்க சென்னை ல எங்க ஆபீஸ் முதல் முதல்ல ஆரம்பிச்ச இடம் தான் PKT ( prince kushal towers).சென்னை ல இருகறவங்களுக்கு பழைய அலங்கார் தியேட்டர் நு சொன்ன தான் புரியும்.... பாக்க கொஞ்சம் பூத் பங்களா மாதிரி இருந்தாலும் எங்க மனச விட்டு நீங்காத பல இனிமையான  நினைவுகளுக்கு காரணம் PKT.
                    PKT ku வரும் பொது எனக்கு சங்கீதாவையும் அவளுக்கு என்னையும் தவிர வேற யாரயும் தெரியாது சென்னைல அப்போ தான் , எங்க ஆபீஸ் தொடங்கின நேரம் அதுனால எங்க mainframes ku 6th floor allocate பண்ணி இருந்தாங்க வெறும்  25 பேர் தான் இருப்பாங்க அந்த முழு floorlaiyum .புது ஆபீஸ் புது கம்ப்யூட்டர் nu  எங்க காலம் கொஞ்சம் நல்லாவே போச்சு.அப்புறம் தான் புதுசு புதுசா ஆளுங்க ஹைதராபாத்ல இருந்து வந்தாங்க எல்லாரும் சென்னை வாசிகள் so எங்களுக்கு ஒரு gang set ஆச்சு சொல்லி வெச்சா மாதிரி எல்லாரும் நைட் ஷிப்டுல இருப்போம்.நைட் ஷிப்டு நாளே எரிச்சல் தொல்லன்னு இருந்த எங்க லைப் செம கலர்புல்ல மாறினது இந்த  timela தான்.



பார்கவி,ஸ்ரீமதி,நான்,சங்கீதா,சரண்யா, ராஜா,ஜெகன்,ராம் பிரகாஷ்,சதீஷ்,திவ்யா நாங்க எல்லாம் ஒரே  platformla வேற வேற accountla  வேல பாத்தோம. அட்சய பாத்திரம் எப்படி அல்ல அல்ல குறையாதோ அதே மாதிரி எங்களுக்கு பேச கதை மட்டும் குறையவே குறையாது .இவ அவன் கூட போன கதைல இருந்து....... 4th floorla   ஆவி இருக்குன்ற கத வரைக்கும் மெகா சீரியல் தோத்துடும் எங்க கிட்ட.
 எங்க gangla கொஞ்சம் வயசானவர் na அது ராம் பிரகாஷ் தான் ஆனா ரொம்ப ஆலதியான ஆள்னாலும் அவர் தான். தான் இருக்கற இடாத எப்பவும் கலகலப்பா வெச்சிக்கணும் நினைக்கற ஆசாமி.ராமோட terror parte அவர் விடுற குறட்டை தான் ......ஒரு தடவ நானும் ஸ்ரீமதியும் ஏதோ ஒரு திராகுல்லா படம் பாத்துட்டு இருந்தோம் வழக்கம் போல நைட் ஷிப்டு தான் மனுஷன் sterio effectla terrora  விட்ட குறட்டைல அலறி அடிச்சி நானும் அவளும் படத்த  offe பண்ணிட்டோம்..P.S இதுல  4th floorla ஆவி இருக்குனு  ஒரு கத வேற உலாவிட்டு இருந்துச்ச.


   PKT மறக்க முடியாததுக்கு இன்னொரு காரணம் தலப்பாகட்டு பிரியாணி எங்க ஆபீஸ்கு oppositela  ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கட இருக்கும்.  எனக்கு தெரிஞ்சி அங்க சாபுட்டா மாதிரி வேற எங்கயும் பிரியாணி நான் சாப்டுல....  9 மணிக்கு பிரியாணி அப்புறம் ஒரு சின்ன  system check அப்புறம் ஒரு இங்கிலீஷ் த்ரில்லர் திரும்பவும் ஒரு  system check அப்புறம் நல்ல தூக்கம் ,அலாரம் வெச்சி  5 மணிக்கு எழுந்து அவசர அவசரமா மறுபடியும் ஒரு  final check அப்புறம் cabla ஏறி வீட்டுக்கு போய் சேர வேண்டியது தான்.

      PKT oda இன்னொரு முக்கியமான plus point na  அது location தான் இந்த பக்கம் ஸ்பென்சர் அந்த பக்கம் சத்யம் theatre  பின்னாடி பீச் nu  எங்கள சுத்தி  ore entertainment தான்.நானும் சதீஷும் லவ் பண்ணிட்டு இருக்கும் பொது பீச்ல கால் வைக்காம வீட்டுக்கு போனது இல்ல, ஆபீஸ்ல  break போட்டு சத்யம்ல படம் பாக்க போனது ச்பென்செர்ஸ்ல window shopping nu PKT ya    சுத்தி நிறைய ஞாபகங்கள்

    வெறும் ஆட்டம் பாட்டம்  இல்லாம வாழ்க்கையோட பல நல்ல விஷயங்கள் நடந்தது அங்க தான் முதல் apprasial  , முதல் rating , என்னோட ஊடல் ,கூடல் ,காதல், கல்யாணம் எல்லாமே......கடந்த காலத்த நினைக்கறதே ஒரு சுகம் அதுலயும் இனிமையான நினைவுகள் தந்த  PKT ya பத்தி அசை போடுறதே ஒரு தனி சுகம்.....