Thursday, November 3, 2011

correctana தப்பு

                       மனைவி  அமைவது மட்டும் இல்லங்க friends  அமையறதும் கடவுள் குடுத்த வரம் .நாம நல்ல friends select பண்ணனோம் நாம தப்பிச்சோம் இல்ல அவ்வளோ தான் நாம காலி அழிஞ்சோம் . Freinds  கூட சேந்து தான் இவன் குடிக்க கத்துகிட்டான் அவன் கூட சேந்து தான் இவன் ரொம்ப ஊர் சுத்துறான் நு சொல்லற அம்மா ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ யாரும் யாரையும் கெடுக்கறது இல்ல அவங்க அவங்கலவே தான் தன்னோட பாதைய select பண்றாங்க. அப்புறம் என்னப்பா நல்ல friends  கெட்ட friends  நு கேகுறீங்களா.
                          Luvers குள்ள சண்டன்ர பேர்ல நடக்குற comedya  விட  friends குள்ள நடக்குற கூத்துக்கள் ஜாஸ்தி.அதுல பாதி சரியான மொக்க விஷியங்கள்.எப்பவுமே நல்லா திண்டு மாதிரி இருக்கற என்னோட தங்கச்சி நல்லா ஒடம்பு இலச்சி போய் இருந்தா . என்ன நித்யா இப்படி  எலச்சிட எனக்கும் அந்த  diet plana சொல்லேன் நானும் கொஞ்சம் எலைக்குறேன் சொன்னதுக்கு," நான் சொல்லுவேன் ஆனா நீங்க யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா சரி சொல்லு  எதுக்கு இவ்வளோ  build up தரன்னு சொல்லி கேட்டா எனக்கும் என்னோட friendsukum  சண்ட அதுல சாப்டாம இருந்து தான் எலசிட்டேன் சொன்ன எனக்கு செம கடுப்பு ஆயிடுச்சு freinds கூட பேசாம இருந்தா சாப்ட கூடாத..... என்ன ஒரு லூசு தனம் இது.தன்ன தானே வருத்திக்க வெக்க கூடிய எந்த ஒரு relationshipum useless  தான் nu என்னோட அபிப்பராயம்.
                            வெறும் காதல்ல மட்டும் poseesiveness இல்ல infact friendshipla தான் ரொம்ப ஜாஸ்தி.... இவ எனக்கு Hi சொல்லல, என் பிறந்த நாளைக்கு first wish  பண்ணால, இன்னைக்கு என் கூட வராம அவ கூட போயிட்டா இந்த மாதிரி அல்ப விஷியங்கள் பல.இந்த கருமம் possessivenessa  பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்கு தனி poste  எழுதலாம் அதா விடுவோம்.எனக்கு எப்பவுமே friends ராசி கெடையவே கெடையாது.நான் நல்லா ஒருத்தர் கூட mingleஆயிட்டே வருவேன் திடீர்னு எதாவது பிரச்சன ஆயிடும் இல்ல அவங்க  வேற ஸ்கூல் போய்டுவாங்க, நம்ம கூடவே ஒட்டுன்னிங்க மாதிரி இருக்கறது எதுவும் நமக்கு ஒத்து வராது.இது ஒரு பக்கம் இருக்க என்னோட இன்னொரு ராசி என்னன்னா........ நான் எப்பவுமே  தப்பான friendsa  தான் தேடி போய் நட்ப்பு வேச்சிப்பேன் எல்லாம் என் கெரக நேரம்.தப்பான friends nu  சொன்ன ஒடனே நீங்க தண்ணி, தம் nu  நெனைக்காதீங்க.சில பேர் நம்ம கூடவே இருந்துட்டு நமக்கே குழி பறிப்பாங்க அனா நம்ம முன்னாடி இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருப்பாங்க.ஆனா இந்த மாதிரி ஆசாமிங்க எதுக்கு நமக்கு நல்லா  freinds மாதிரி நடிக்கணும் அது தான் நம்ம மனசுக்குள்ள ஓடுற கேள்வி பதில் இல்லாத கேள்வி.எனக்கு இந்த மாதிரி பல கசப்பான அனுபவங்கள் இந்த மாதிரியான freinds  மூலமா  sorry ஆசாமிங்க  மூலமா நடந்து இருக்கு. 
                             பேர் சொல்ல விரும்பாத என்னோட கூட படிச்ச friend  எனக்கு அடுத்த roll number அவ...... இதுனாலையே  நாங்க நல்லா freinds ஆனோம்னு தான் சொல்லணும் அடிப்படைல அந்த பொண்ணும் நானும் chalk & cheese characters  ஆனா ஏனோ எனக்கு அவல ரொம்ப புடிக்கும் may be  அவளோட அந்த அமைதியான குணமா கூட இருக்கலாம்.இப்படி  அடுத்தடுத்த இருக்கற roll numberla ஒரு 7  பேர் நல்லா friends  ஆனோம் .நாங்க 7 பெற இருந்தாலும் எனக்கு என்னமோ அவல மட்டும் தான் ரொம்ப புடிக்கும் எப்பவும் போல அவளுக்கும் என்ன மட்டும் தான் புடிக்கணும் லூசு மாதிரி நானும் அப்போ அப்போ நெனைப்பேன் ஆனா என்ன பெத்தத தவிர என்னோட அம்மா.... அப்பா.... வேற எந்த பாவமும் செய்யாததுனால அந்த புண்ணியத்துல நான் என்னையே  அப்போ அப்போ self analyise பண்ணிப்பேன்.அதுனால ரொம்ப லூசு தனமாthink பண்ணாம கொஞ்சம் தப்பிச்சேன்.ஆனா எனக்கு வந்த பிரச்சன possessiveness  இல்ல, நான் யார ரொம்ப விரும்பி நேனோ அந்த பொண்ணு என்ன பத்தி எங்க gang friends கிட்டயே தப்பு தப்பா சொல்லி இருக்கறது பின்னாடி தான் எனக்கு தெரிய வந்துது.அவ நல்லா நேரம் இது எல்லாம் எனக்கு தெரிய வந்த பொது நாங்க காலேஜ் முடிச்சி இருந்தோம்.இல்லனா மட்டும் நான் என்ன கிழிச்சி இருப்பேன்னு கேக்குறீங்களா, ஒன்னும் கிழிக்க முடியாது தான்.ஆனா  அவ ஏன் என்ன பத்தி தப்பு தப்பா எல்லார் கிட்டையும் சொன்னானது தெரிஞ்சிக்கலாம்ல.இது மட்டும் இல்லாம என்ன பத்தி எப்படி மத்தவங்க கிட்ட சொன்னாலோ அதே மாதிரி அவங்கள பத்தியும் என் கிட்ட தப்பு தப்பா சொல்லி இருந்தா.அவ ஏன் அப்படி செஞ்சான்னு எங்களுக்கு இது நாள் வரைக்கும் தெரியல நாங்களும் அவ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க விரும்பல எனக்கு என்னமோ அவ என்னோட முதுகுல குத்தினா மாதிரி இன்னும் சின்ன வலி இருக்கு.இது ஒரு பெரிய பண ஏமாத்தோ, இல்ல பித்தல மாத்தி வேலையோ இல்ல ,ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு நம்பிக்கை  துரோகம் தான்.
                       இப்படி  இவ ஒருத்தி மட்டும் இல்ல இன்னும் பல பேர் கிட்ட இப்படி  தான் நான் செம அடி வாங்கி இருக்கேன் ஒரு வேல அவங்களோட இயல்பே அது தானோ, நான் தான் தப்பானவங்க கூட சகவாசம் வேச்சிகிட்டேனோ அப்படியே இருந்தாலும் என்ன புடிக்கலன புடிக்கலன்னு சொல்லிடு போய் இருக்கலாம் அதா விட்டு எதுக்கு என் கூட  இருந்துகிட்டே எதுக்கு எனக்கு குழிப்பரிக்கணும். நாம எப்பவுமே கைல இருக்கற வைரத்த விட்டு கூழன்கல்ல பொருக்கரதுல தான் ஆர்வம் காட்டுவோம் அதே மாதிரி சில நண்பர்கள் நம்ம கூடவே இருப்பாங்க கூடவே பயணிப்பங்க ஆனா நம்ம மனசு  அவங்கள ஒருபோதும் கண்டுக்கவே கண்டுக்காது.இன்னைக்கு அந்த மாதிரி என்கூடவே இருந்து நான் கண்டுக்காம இருந்தா அந்த சில நண்பர்கள் தான் இப்பவும் என்கூட இருக்காங்க.எனக்கு எந்த பிரச்சனையும் குடுக்காம .
                         என்ன பொறுத்த மட்டில் நானா தேடிபோற எந்த ஒரு  relationshipum எனக்கு workout ஆனது இல்ல அதுனாலயே யாரையாச்சும் புடிச்சே இருந்தாலும் ஒரு Hi யோட முடிச்சிக்கறேன். நம்மளோட சாப்பாடு மட்டும் இல்ல நமளோட  friendsum நம்ம கூட இருக்கணும்னு விதிக்கப்பட்டவங்க தான் நம்ம பயணத்துல கொஞ்ச தூரம்னாலும்  வராங்க மத்தவங்க எல்லாம் தடம் தெரியாம காணாம போய்டுறாங்க.

1 comment:

Unknown said...

vidunga... sandaiyile kizhiyatha sattai enge irukku?