Thursday, October 27, 2011

அவ்விட தேசம் ...

நீங்க பாத்த அழகான இடம் எது  nu கேடீங்கன்ன எல்லாரும் சொல்லற listla கண்டிப்பா கேரளா  இருக்கும் .அமாம் நிச்சயமாக கேரளம் "Gods own country "  தான் . இந்தியாவோட சின்ன statea இருந்தாலும் அதோட இயற்கை எழில் கொஞ்சும் அழகு ku ஈடு இணையே இல்ல nu தான் சொல்லணும்.மலையாள பொண்ணுங்க எவ்வளோ அழகோ அதா விட பல மடங்கு  அந்த மண் அந்த ஊர் அவ்வளோ அருமை....
        நான் naturea  ரொம்ப ரசிக்க கூடிய ஆள் எல்லாம் இல்ல..... எல்லாரும் கேரளா அவ்வளோ அழகு ஆஹா ஓஓஹோ நு புகழ் பாட்டு பாடும் பொது அப்புடி என்ன தான்  pa இருக்கு அங்க ... அது என்ன himachal pradhesh மாதிரி பனி தேசமா என்ன? வெறும் புல்லு ....மரம் அதுக்கு இந்த  indha buildupa  nu தான் நானும் நெனச்சேன்...... ஆனா இப்போ அப்படியே  என்ன upside downa மாத்தினது ....மயக்கினது அவ தான். என்ன அவனு சொல்லறேன்னு பாக்குறீங்களா? எதாச்சு ஒன்னு அழகா இருந்த அது கண்டிப்பா பெண்ணா தானே இருக்கா முடியும்(i am not getting into mars vs venus conversation ) .
                காதல்,புகழ், மது, மாது, மாட்டும் போத இல்ல இயற்கை அதா விட பெரிய போத .இது போதும்னு சொல்லவே தோணாது இன்னும் இருக்கா nu தான் கேக்க தோணும்

          எனக்கு இயற்கைய ரசிக்க சொல்லி குடுத்தது என்னமோ நம்ம மலைகளின் இளவரசி ஆனா மாசு இல்லாத, மாற்றம் இல்லாத கடவுள கிட்ட பாத்த மாதிரி இயற்கைய கிட்ட பாத்தது  கேரளத்துல தான்.என்னோட முதல் கேரளா visit  நான் college படிக்கும் பொது மூணார் போனோம் familyoda மதுரைla இருந்து ஒரு tempo travellerla தான் போனோம். பயணம், அதுவும் மலை பயணம் ,,அதுவும் குடும்பத்தோட இத விட வேற என்ன பெரிய  enjoyment இருக்க பொது அதுவும் vacation timela.நாங்க மூணார் போய் சேரும் பொது கூம் இருட்டு பக்கத்துல இருக்கற ஆள் குட தெரியாத இருட்டு எங்க போறோம் எந்த எடத்துல தங்கி இருக்கோம்னு கூட தெரியல காலைல நாங்க தங்கி இருந்த room ku வெளில போய் பாத்தா..... பச்சை கம்பளம் விரிச்சா மாதிரி எங்க resorta சுத்தி T estate. மிதமான வெயில் ,மொகத்த தொட்டு போற குளிர் காத்து, எங்க பாத்தாலும் பச்சை போர்வை nu மூணார் ஒரு சொர்க்கம் .ஆனா என்னவோ எனக்கு மூணார் ஒரு kerala effecta தரவே இல்ல may be அது தேனி border  நாளாவோ என்னவோ.ஏதோ ஒரு மலைப்ரதேசத்துக்கு போன feel  தான் இருந்துச்சு .        
           அதுக்கு அப்புறம் கேரளா போறத பத்தி அதிகம் நான் யோசிக்கல.. 2010  aug la ஒரு சின்ன vacation போறதா  plan பண்ணோம் எங்க போறது nu  வரும் பொது நான் netla browse பண்ணி வயநாடு nu  கேரளா ல ஒரு எடம் இருக்கு அங்க போலாம் சொன்னேன், வயநாடு அதிகம் explore  பண்ணாத எடம் கேரளாla So எல்லாரும் அங்கேயே போகலாம்nu decide   பண்ணோம் . Geographically கேரளாவோட northla  இருக்கற ஒரு சின்ன district.வயநாடு.சென்னைல இருந்து கோழிகோடு வரைக்கும் trainla போய் அங்க இருந்து  tempo travellerla வயநாடு மலை ஏறினோம் .மலை nu சொன்ன ஒடனே நம்ம ஊட்டி இல்ல கோடை மாதிரி கற்பன பண்ணாதீங்க அந்த அளவுக்கு hairpin bends இல்ல  இங்க . மூணார் மாதிரி இல்லாம இந்த வாட்டி பகல்la மலை ஏறினோம். இளம் பச்சை செடிங்க , நல்லா ஓங்கு தாங்க வளந்து இருக்கற மரங்கள்.... பாதி எடத்த மூடி இருந்த mist மறக்கவே முடியாத பயணம் அது " i smelled the real flavour of kerala" இல்ல இல்ல  to be precise the real smell of nature.வாயனாடுல homestays  தான் ஜாஸ்தி நாங்க ஒரு 9 பேர் போனதுனால homestayla  தான் தங்கினோம் .அந்த property  இருந்த எடமே ஒரு சொர்க்கம் .சிராபூஞ்சி ku  அப்புறம் அதிக மழை பெய்யறது அந்த எடத்துல தான் .ஒரு மலை பிரதேசத்துல..... சுத்தி பச்சை பசேல்னு செடிக்கு....  நடுல இருக்கற  அழகான வீடு திண்ணைல ஒக்காந்து மழைய ரசிக்கறது எப்படி பட்ட கொடுப்பினை நான் தெரிஞ்சிக்கிட்டது அப்போ தான் .வாயனாடோட specialitye அதோட rawness  தான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதிகமா  மக்கள் புழங்காத எடம் இயற்கைய அதோட போக்குலயே விட்டு இருக்கற unexplored beautiful region.அங்க இருந்த ஒரு 4 falls ku  சரியான படிகட்டோ  இல்ல பாதையோ இல்ல trek பண்ணி தான் போகணும் .Falls nu சொன்ன ஒடனே குளிக்கற மாதிரி இருக்குமோ nu தான் நெனச்சோம் ஆனா எப்பவும் போல அங்க குளிக்க முடியாது ...அதிரம்பள்ளி மாதிரி பெரிய falls nu அத பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது . Fallsa  பத்த அந்த நொடி எனக்கு தோணுனது "இது தான்  da சொர்க்கம்" இந்த உண்மையான சந்தோஷத்த தொலைச்சிட்டு அல்ப விஷியத்துக்கு ஒடுரோமே nu. .

           மணிகணக்குல queuela நின்னு கோவில்ல சாமிய கிட்ட பாக்குற மாதிரி மணிகணக்கா trek பண்ணி அந்த  water fallsaiyum ஆதி வாசிகள் வாழ்ந்த குகைகளையும் பாத்தா பொது I felt i was tooo close to nature.Nature நமக்கு வெறும் மன அமைதிய மட்டும் தரல..... எத செய்யணும், எத செய்ய கூடாது நும்.... சில விஷங்கள அதோட போக்குலயே விடுறது தான் அழகுனும் சொல்லி கொடுக்குது .எனக்கு வாயனடுல சுத்தும்பொது பாசில் படத்துல பாத்த அந்த green scapes மாதிரியே இருக்கேன்னு தான் தோணுச்சு..... அட chai மக்கு... மாதிரி என்ன மாதிரி பாசில் படங்கள வாய் போலந்து பாத்த எடத்துல தான் இருக்கேன் nu அப்புறம் தான் ஓரச்சிது.வயநாடு நேத்து சமஞ்ச பொண்ணு மாதிரி ஒரு கன்னி தன்மையோட fresha  இருந்தது. என்னோட கவலை இன்னும் 5 வருஷம் அப்புறம் ஊட்டி கோடை மாதிரி இதுவும் குப்பை மேடா ஆகிட கூடாதுன்னு தான்.Modernisation & development ra பேர்ல அதோட அழக இந்த மனுஷங்க கெடுத்ததுட கூடாது
             வாழறத்துக்கு கொஞ்சம் காசு , அழகான கேரளத்து stylea ஒரு வீடு nu வாழ்க்கையோட பின் பகுதிய அர்த்தமுள்ளதா, என் மனசுக்கு புடிச்சா மாதிரி..... வயநாடு போல ஒரு மலைதளத்துல தான் கழிக்கணும் nu விரும்பறேன் . இயற்கைய நேசிக்கற இயற்கைய இன்னும் அனுபவிக்காத இயந்திர உள்ளங்கள் கண்டிப்பா போக வேண்டிய இடம் கேரளம் .இசையையும் இயற்கையையும் ரசிக்காத உங்கள்  உண்டோ ?என்ன பொறுத்த வரைக்கும் இந்த வயநாடு ஒரு வாழ்க்கை அனுபவம்.இது ஒரு ராஜா பாட்டு மாதிரி .....

1 comment:

Unknown said...

நல்லா இருந்துச்சு. நான் இன்னும் வயனாடு பார்த்ததில்லை. உங்க பதிவு படிச்சப்புறம் சீக்கிரமா பாக்கனும்னு தோனுது. Coming to your concluding piece - ரொம்ப லேட்... ஒரு மலையாளி பையனா பார்த்து புடிச்சிருந்தீங்கன்னா காலத்துக்கும் கேரளாவிலேயே செட்டில் ஆகியிருக்கலாம்.